கால்நடைகளின் நலனுக்காக திருவிழா; மாட்டுப் பொங்கலன்று பிறக்கும் கன்றுக்கு தனி மரியாதை!

0
'நானும் என் குடும்பமும் நல்லாயிருக்கணும்' என்பதே பெரும்பாலும் எல்லோரின் வழிபாடாக இருக்கும். பெரிய மனதுடையவர்கள் 'எல்லோரும் நல்லாயிருக்கணும்' என்று வேண்டுவார்கள். 'ஆடு, மாடெல்லாம் நல்லாயிருக்கணும்' என்று வேண்டிக்கொள்வதோடு அதற்கென்று ஒரு திருவிழாவே நடத்தும் மக்களும் இருக்கிறார்கள் என்பது வியப்பு தானே..?

திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி அருகே சோமவாரப்பட்டி கிராமத்தில்தான் இந்த அதிசயம். அங்குள்ள ஆல்கொண்டமால் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கலில் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது இந்தத் திருவிழா. இந்தத் திருவிழாவுக்குப் பின்னணியில் இருக்கிறது ஒரு புராணக்கதை.

ஆலமரத்தூர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய சோமவாரப்பட்டியில் மேய்ந்த பசுக்கள், அங்கிருந்த ஒரு புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தனவாம். அப்போது, பசு ஒன்றை பாம்பு தீண்டி உள்ளது. பாம்பின் விஷம் பசுவை பாதிக்காமல் இருக்க, விஷத்தை உண்டு அந்த சிவனே பசுவைக் காப்பாற்றியதாக நீள்கிறது அந்தக்கதை. தற்போதிருக்கும் ‘ஆல்கொண்டமால்’ கோயில் புற்று இருந்த இடத்தில் எழுப்பப்பட்டதாக நம்பிக்கை.

கால்நடைகளின் காவல் தெய்வம்

இந்தக் கோயிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மூன்று நாள்கள் பிரமாண்டமாக திருவிழா கொண்டாடப்படும். பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கானோர் மாட்டுவண்டி பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இத்திருவிழாவுக்கு வருகிறார்கள். மாட்டுப் பொங்கலன்று காலையில் தொடங்கி மறுநாள் பூப்பொங்கல் முடியும்வரை பெதப்பம்பட்டி சாலைகளில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மாட்டு வண்டிகள் மட்டுமே தெரியும். இந்த மூன்று நாள்களிலும் சுமார் 3 லட்சம் பேர் குவிகிறார்கள்.

"இந்த ஆல்கொண்டமால் தயவுலதான் எங்கவூர் ஆடு மாடுங்க ஜீவிச்சுக்கெடக்குங்கிறது எங்க நம்பிக்கை. ஆட்டு்க்கோ மாட்டுக்கோ நோவு கண்டா ஆல்கொண்டமாலுக்கு உருவார பொம்மை வாங்கி வைக்கிறதா வேண்டிக்குவோம். நோவு வரக்கூடாதுன்னு சொல்லி நேந்துக்கிறவங்களும் இருக்காங்க. திருவிழாவுக்கு முதநாள்ல இருந்து சுத்துவட்டார மண்பாண்டக் கலைஞர்கள் திரண்டு வந்து உருவாகப் பொம்மைக் கடைகளைப் போட்ருவாங்க. சிலபேரு ஊர்லயே பொம்மை செஞ்சு வாங்கிட்டு வருவாங்க.

ஆலடகொண்டமால் கோயிலில் உள்ள பொம்மைகள்

இந்த உருவார பொம்மைகளை வாங்கி சாமி முன்னாடி வச்சு தேங்காய் உடைச்சு அந்தத் தண்ணியில பொம்மைக்கு கண் திறந்து வழிபடுவாங்க. இதைச் செய்துட்டா ஆடு, மாடுங்க ஆரோக்கியமா இருக்கும்ங்கிறது எங்க நம்பிக்கை...." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார். மாட்டுப் பொங்கலன்று பிறக்கும் கன்றுகளை கோயிலுக்கே நேர்ந்துவிடும் பழக்கமும் இருக்கிறது. அப்படி நேர்ந்துவிடப்படும் மாடுகளை 'சலகெருது' என்கிறார்கள்.

"சலகெருதுன்னா சலங்கை மாடுன்னு பேரு. அந்த மாட்டு்க்கு மூக்கணாங்கயிறு போடமாட்டோம். சுற்றுவட்டாரத்துல இருக்கற எல்லா கிராமங்கள்லயும் சலகெருது வளர்ப்பாங்க. அடையாளத்துக்காக அதோட காதுகளை சூலாயுதம்போல மாற்றி, உருமி இசைக்கு ஆட பயிற்சி கொடுப்பாங்க.

ஆல்கொண்டமால் கோயில்

திருவிழாக்காலங்கள்ல இளைஞர்கள் சலங்கை கட்டிக்கிட்டு அந்த மாட்டுக்கு முன்னால இரண்டு நீள மூங்கில் கம்புகளை உயரத் தூக்கிக்கிட்டு நடனம் ஆடுவாங்க. அந்த மாடும் இசைக்கு ஏற்ற மாதிரி ஆடும். இதுக்கு சலங்கையாட்டம்னு பேரு..." என்கிறார் சிவகுமார்.

கால்நடைகளை சக உயிராக மதிக்கும் மரபு தமிழர்களுடையது. கால்நடைகளின் நலனுக்காகவே ஒரு வழிபாட்டையும் திருவிழாவையும் உருவாக்கி வைத்திருக்கும் சோமவாரப்பட்டி மக்கள் அதை மெய்ப்பிக்கிறார்கள்.

மேலும் படிக்க கால்நடைகளின் நலனுக்காக திருவிழா; மாட்டுப் பொங்கலன்று பிறக்கும் கன்றுக்கு தனி மரியாதை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top