சேலம், தாரமங்கலம் அருகே பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் லாரி டிரைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தாரமங்கலம் அருகே கருப்பு பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தாரமங்கலம் போலீஸாருக்கு தகவல் அளித்ததின் பேரில், தீயணைப்புத் துறையினர் மூலம் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.
அதில், இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், உடலில் பாதி பாகம் இல்லாமலும் சடலத்தை மீட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை செய்ததில் இறந்தது லாரி டிரைவர் மணி என்பது தெரியவந்தது. அதையடுத்து,போலீஸார் மணியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதோடு அவருடைய குடும்பத்தாரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மணிக்கு அவருடைய மனைவி செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டதும், ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதன் மூலம் போலீஸார் மணியின் செல்போன் என்னை கொண்டு, கடந்த ஒரு வாரமாக இந்த எண்ணிற்கு யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றனர் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட எஸ்.பி., சிவகுமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் மோப்ப நாய்களை வரவழைத்து, சம்பவ இடத்தில் குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்கிறதா என்ற முயற்சியில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் மணி இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸார், பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். மேலும் போலீஸார் பல்வேறு கோணத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க சேலம்: லாரி டிரைவர் உடலைத் துண்டித்து படுகொலை... தீவிர விசாரணையில் போலீஸ் - என்ன நடந்தது?