ஈரோடு: சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை விபத்தில் வாலிபர் பலி - பெரும் விபத்து தவிர்ப்பு!

0

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 டன் எரிவாயு நிரப்பப்பட்டு, அந்த சிலிண்டர்கள் கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆலையில் ஷிஃப்ட் அடிப்படையில் 200 ஒப்பந்த தொழிலாளர்களும், 50 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆலையில் எரிவாயு சிலிண்டர்களை நிரப்பும் பணியில் சேலம் மாவட்டம், ஆத்தூர், தம்மம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் சரவணன் (25) என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரில் எரிவாயு நிரப்பி விட்டு அதை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்து சக ஊழியர்களான அருள், ஜெகன், ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையின் முகப்பு

விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் கூறுகையில்,
``தினமும் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு சுழற்சி செய்வதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பழுது ஏற்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட ஒரு சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் போது ஏற்பட்ட இந்த விபத்து ஏற்பட்டது” என்றனர்.

19 கிலோ சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் பணியில் சரவணன் ஈடுபட்டிருந்தபோது, சிலிண்டரின் கீழ் பக்கம் தனியே கழன்று விட, சிலிண்டரின் மேல் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தனியே சிதறி சரவணனின் நெஞ்சில் பட்டு தெறித்து போய் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சரவணன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பெருந்துறை சிப்காட்

விபத்து நடந்த இடத்தின் அருகே எரிவாயு குழாயும், தண்ணீர் செல்லும் குழாயும் அருகருகே உள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிலிண்டரின் ஒரு பகுதி தாக்கியதில் தண்ணீர் குழாய் மட்டும் உடைந்து தண்ணீர் வெளியேறியது. ஒருவேளை அருகிலிருந்த எரிவாயு குழாய் உடைபட்டு இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து பெருந்துறை போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளும் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க ஈரோடு: சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை விபத்தில் வாலிபர் பலி - பெரும் விபத்து தவிர்ப்பு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top