தடையை மீறி லேப்டாப், செல்போனில் மோடி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் - மும்பை டாடா கல்லூரியில் பரபரப்பு

0

மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்கள் சர்ச்சைக்குரிய மோடியின் பிபிசி ஆவணப்படத்தை ஒரே இடத்தில் கூடி பார்க்கப்போவதாக தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே நாடு முழுவதும் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியான இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு அகற்றிவிட்டது. நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் இந்தப் படத்தை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில், மும்பை கல்லூரி மாணவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து கல்லூரியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. கல்லூரி நிர்வாகம், `இந்தப் படத்தை ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக கூடி பார்க்கவேண்டாம்' என்று எச்சரிக்கை செய்திருந்தது.

மோடி

ஆனால், மாணவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உட்பட பா.ஜ.க-வினர் சிலர் பிபிசி படத்தை ஒரே இடத்தில் கூடி பார்க்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம், `ஒரே இடத்தில் கூடி பிபிசி-யின் சர்ச்சைக்குரிய படத்தைப் பார்க்க அனுமதிக்கமாட்டோம்' என்று போலீஸார் சொன்னதால், பா.ஜ.க-வினர் கலைந்து சென்றனர். மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலாரும் மாணவர்கள் மீது போலீஸார் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து மாணவரணி தலைவர் பிரதிக் , ``நாங்கள் பிபிசி படத்தை திரையிட முடிவு செய்யவில்லை. இதற்கு முற்போக்கு மாணவர் அமைப்புதான் ஏற்பாடு செய்திருந்தது" என்று தெரிவித்தார்.

கல்லூரி நிர்வாகமும் ஒரே நாளில் இரண்டு முறை மாணவர்களிடம் சர்ச்சைக்குரிய படத்தைப் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதோடு படத்தைப் பார்க்க திரை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இது போன்ற செயல் கல்லூரியின் அமைதியை சீர்குலைக்கும் என்பதால், இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால், அதையும் மீறி இரவு 7 மணிக்கு மேல் பிபிசி-யின் படத்தை மாணவர்கள் தங்களுக்குள் கியூஆர் கோடை பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் தங்களது லேப்டாப், மொபைல் போனில் பார்த்தனர்.

போராட்டம்

10 லேப்டாப்களில் 200 மாணவர்கள் கல்லூரியில் ஆங்காங்கே அமர்ந்து பார்த்ததாக, அதற்கு ஏற்பாடு செய்த சிவானந்தன் என்ற மாணவர் தெரிவித்திருக்கிறார். `மாணவர்கள் தங்களது தனிப்பட்ட லேப்டாப், மொபைல் போனில் பார்த்திருக்கலாம். ஆனால், அதனை கண்காணிக்க முடியாது' என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தால் கல்லூரியில் காலையிலிருந்து இரவு வரை பரபரப்பு தொற்றிக்கொண்டது.


மேலும் படிக்க தடையை மீறி லேப்டாப், செல்போனில் மோடி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் - மும்பை டாடா கல்லூரியில் பரபரப்பு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top