ஏழு வயது ஸ்ருதியின் கொலைக்குக் காரணம்... ஏழு வயது ஸ்ருதியே! சட்டம் இருட்டறையா, கல்லறையா?

0

பள்ளிக்கூட பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியே கீழே விழுந்ததால் கொல்லப்பட்ட ஏழு வயது ஸ்ருதியை மறந்திருக்க முடியாது. அப்படி மறந்திருந்தாலும், நேற்று (25.01.23) செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பு, மீண்டும் அதை நினைவுபடுத்தியிருக்கிறது. கூடவே, பதறவும் வைத்திருக்கிறது. `சட்டம் என்றென்றைக்கும் ஓர் இருட்டறையே' என்பதையும் அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருதடவை நினைவூட்டியிருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு, செங்கற்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகேயுள்ள சேலையூயில் இயங்கிவரும் சீயோன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஏழு வயது ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் தளத்திலிருந்த ஓர் ஓட்டை வழியே கீழே விழுந்தார். சகமாணவிகள் கூச்சலிட்டுக் கதறி தீர்க்க, பேருந்தை சற்று தொலைவாக நிறுத்திவிட்டு தப்பியோடினார் டிரைவர். அதற்குள்ளாக அந்தக் கொலை நடந்து முடிந்துவிட்டது. ஆம், ஸ்ருதி கொல்லப்பட்டுவிட்டார்.

சிறுமி சுருதி

பேருந்தில் நீண்டநாள்களாகவே ஓட்டை இருந்துள்ளது. அதை மறைப்பதற்காக ஓர் அட்டையை வைத்து மூடியிருந்தனர். அது அட்டை என்பதால், இயல்பாகவே பலமிழக்க... ஸ்ருதி கொல்லப்பட்டாள் என்பதுதான் சகமாணவிகள் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலம். இதன் அடிப்படையில்தான் பள்ளியின் தாளாளர், பேருந்துக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது அப்போது போலீஸ் தரப்பிலிருந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சில மாதங்களிலேயே அனைவரும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். அதுமட்டுமல்ல, ஸ்ருதியின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு தரப்பட வேண்டும் என்கிற அப்போதை நீதிமன்ற உத்தரவும் நிறைவேற்றப்படாமலேயேதான் இருந்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து, தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துவிட்டது நீதிமன்றம்.

ஆக, இந்த எட்டு பேருக்கும் ஸ்ருதியின் மரணத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டது நீதிமன்றம். கேவலமான நிலையில் ஒரு பேருந்தை அந்தப் பள்ளி நிர்வாகம் ஓட்டிக் கொண்டிருந்ததில் எந்தத் தவறுமில்லை என்று சான்றளிக்கப்பட்டுவிட்டது.

அத்தகைய கேவலமான பேருந்தை, தரமான பேருந்து என்று சான்றிதழ் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீது துளிகூட தவறில்லை என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டுவிட்டது. ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்து, உயிர்களுக்கு உலை வைக்கலாம் என்று தெரிந்திருந்தும் தொடர்ந்து அதை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கும் ஸ்ருதியின் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது.

பேருந்தில் இருந்த ஓட்டை

நடந்தது ஒரு கொலை. ஏழு வயது பிஞ்சு கொல்லப்பட்டிருக்கிறார். யார்தான் அவளைக் கொன்ற குற்றவாளி? வேறு யார்.... ஸ்ருதியேதான். ஆம்... இந்தக் கேடுகெட்ட சமுதாயம் எதையும் எப்படியும் புரட்டிப்போடும் என்று தெரிந்து கொள்ளாமல் இங்கே பிறந்தது ஸ்ருதியின் குற்றம்தானே.

அதிகார வர்க்கம், கல்வி வணிகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டுக்களவாணிகள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஏழு வயது வரைக்கும் வளர்ந்தது ஸ்ருதியின் குற்றம்தானே. அந்த இரண்டாம் வகுப்பு மாணவிக்கு, `பேருந்தில் ஓட்டை இருந்தால், அதை அட்டை வைத்து அடைக்கும் அதிபுத்திசாலிகள் நிறைந்திருப்பார்கள்' என்பதுகூட தெரியாமல் போய்விட்டதே. அதுவும் ஸ்ருதியின் குற்றம்தானே!

பேருந்து ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சிறுமி

கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால், கொலை செய்தாலும் தப்பித்துக் கொள்ளும் வகையில் சாட்சியங்களையும் குற்றப்பத்திரிகையையும் தயார் செய்யும் திருட்டு போலீஸ்கள் நிறைந்த நாடு என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல், பணத்தைக் கட்டி அந்தப் பேருந்தில் பயணித்ததும் அந்தப் பிஞ்சின் குற்றம்தானே!

நெஞ்சு கொதிக்கிறது. சட்டம் இருட்டறையா, கல்லறையா? ஒருவேளை, `ஸ்ருதியின் கொலைக்குக் காரணம்... ஸ்ருதியே' என்பதையும் தீர்ப்பில் சேர்த்திருந்தால், நெஞ்சு கொதிப்பு அடங்கியிருக்குமோ?!

- ஜூகோ


மேலும் படிக்க ஏழு வயது ஸ்ருதியின் கொலைக்குக் காரணம்... ஏழு வயது ஸ்ருதியே! சட்டம் இருட்டறையா, கல்லறையா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top