ஈரோடு கிழக்கு: ``அதிமுக சார்பில் போட்டி; எடப்பாடியுடன் பேச தயார்; பாஜக கேட்டால்...” - பன்னீர்செல்வம்

0

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வெ.ரா திருமகன் வெற்றிபெற்றார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சமீபத்தில் அவர் மரணம் அடைந்தார். இதனால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 18-ம் தேதி அறிவித்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியை பொருத்தவரை ஈரோடு கிழக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் காரணமாக அதிமுக-வுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்க சம்மதம் தெரிவிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்திருந்தார். அதிமுக கூட்டணியில் பாஜக இன்னும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டிடுவதா கூட்டணிக்கு ஆதரவா என்ற தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

எடப்பாடி - பன்னீர்

ஒற்றைத் தலைமை பிரச்னை வந்த பிறகு, அதிமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது என்பதால், இதில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக தங்கள் வேட்பாளர் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். மேலும் அதிமுக நலனுக்காக எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ``அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கியது நாங்கள் அல்ல. அதிமுக விதிகளின்படி தான் கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தற்போதைய தர்மயுத்தம். இரட்டை இலை சின்னம் முடங்கி போக ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒருவேளை சின்னத்தை தேர்தல் ஆணையமே முடக்கினால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்திடமும் பேசுவோம். கூட்டணி கட்சியினரும் எங்களிடம் பேசி தான் வருகின்றனர். ஒருவேளை பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டால் ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.

ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் தற்போதைய நிலவரப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் ஃபார்ம்களில் நான் கையெழுத்து போடுவேன். உள்ளாட்சி தேர்தலிலேயே நான் ஒருங்கிணைப்பாளராக கையெழுத்து இட்டேன். எனினும் எடப்பாடி பழனிசாமி தான் கையெழுத்து இட வில்லை.” என்றார்.


மேலும் படிக்க ஈரோடு கிழக்கு: ``அதிமுக சார்பில் போட்டி; எடப்பாடியுடன் பேச தயார்; பாஜக கேட்டால்...” - பன்னீர்செல்வம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top