ஈரோடு கிழக்கு: ``மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது; அதிமுக வெல்லும்” - செங்கோட்டையன் நம்பிக்கை

0

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட ஈரோடு, பெரியார் நகரில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் முகவர்களை, முன்னாள் அமைச்சர்களான கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோருக்கு ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக பெரியார் நகர் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மனோகரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், சுமார் 100 பெண்கள் ஆரத்தி எடுத்தும் முன்னாள் அமைச்சர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.  

கோபி எம்.எல்.ஏ.வும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
``தமிழ்நாட்டில் முன்பு ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. உள்ளாட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, கல்வி என அனைத்துத் துறைகளிலும் சிறந்த ஆட்சியை நிறைவேற்றி தந்தார். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் மன மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் மக்கள் நினைத்த எந்த பணிகளும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்குவது, ஸ்கூட்டிக்கு மானியம், இலவச மடிக்கணினி, மிக்சி- கிரைண்டர், ஆடு- மாடுகள் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

ஆரத்தி எடுக்க காத்திருக்கும் பெண்கள்

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறிய திட்டம், எரிவாயுவுக்கு ரூ. 100 மானியம் வழங்குவதாக கூறியது, தாலிக்குத் தங்கம் போன்ற எந்த திட்டத்தையும் நிறைவேற்றப்படவில்லை. முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 3 லட்சம் முதியோருக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் எந்த மக்கள் நலத்திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்பதால் மக்கள் மத்தியில் தி.மு.க ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

எனவே அமைதியான முறையில் நேர்மையான வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதியை பொருத்தவரை அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

விரைவில் அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அதன் பிறகு எல்லோரும் வியக்கத்தக்க வகையில் அ.தி.மு.க தேர்தல் பணியாற்றி வெற்றி பெறுவோம்.
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தான் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆச்சர்யமூட்டும் வகையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக கிடைக்கவே வாய்ப்புள்ளது. மனுத்தாக்கல் முடிந்த பிறகு அதை நீங்களே (பத்திரிகையாளர்கள்) புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

செங்கோட்டையன்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், `தேர்தலின்போது மெகா கூட்டணி அமைப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதுவரை த.மா.கா தவிர வேறு எந்தக் கட்சியும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே’ என்றும், `அ.தி.மு.க நான்காக பிளவுபட்டுள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளனர். ஓ.பி.எஸ்.,  இ.பி.எஸ் பிரிவாக பிரிந்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்று  டிடிவி.தினகரன் கூறுகிறார். ஜான் பாண்டியன் இரட்டை இலை உள்ள கட்சிக்கு தான்  ஆதரவு என்கிறார். இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், "பொறுத்திருந்து பாருங்கள், சின்னம் எங்களுக்கு தான்" என்று முடித்துக் கொண்டார்.


மேலும் படிக்க ஈரோடு கிழக்கு: ``மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது; அதிமுக வெல்லும்” - செங்கோட்டையன் நம்பிக்கை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top