இட்லி, ஆப்பம், பிரியாணி... சிறுதானியங்களில் சிறப்பான வீக் எண்டு விருந்து

0

2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஐ.நா. கடந்த சில வருடங்களாக சிறுதானிய உணவுமுறை குறித்து அதிகம் பேசுகிறோம். சிறுதானிய சமையல் சுவையாக இருக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. சத்துகளைப் போலவே சுவையிலும் சிறுதானிய உணவுகள் சளைத்தவை அல்ல. அந்த அனுபவத்தைப் பெற இந்த வார வீக் எண்டுக்கு சிறுதானியங்களை வைத்துச் சமைக்க உங்களுக்கு சில ஸ்பெஷல் ரெசிப்பீஸ்...

குள்ளகார் காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை:

குள்ளகார் (புழுங்கல்), குள்ளகார் (பச்சை) - தலா ஒரு கப்

உளுந்து - கால் கப்

அவல் - கால் கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

மிளகு, சீரகம் (பொடித்தது) - 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - 12 இலைகள்

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் + ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

குள்ளகார் காஞ்சிபுரம் இட்லி

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவிடவும். அவலைக் கழுவி தனியே ஊறவைக்கவும். பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

2 டேபிள்பூன் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து, சிவந்ததும் பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, தேங்காய்த் துருவல், பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து மாவில் சேர்க்கவும். அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து டம்ளர் அல்லது இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

கிச்சலி சம்பா சாத்தமுது

தேவையானவை:

கிச்சலி சம்பா அரிசி - ஒரு கப்

துவரம்பருப்பு - அரை கப்

தக்காளி - 3

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கிச்சலி சம்பா சாத்தமுது

செய்முறை:

அரை கப் துவரம்பருப்பை நன்கு வேகவைத்துக் கொள்ளவும். அரிசியுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். வெந்த துவரம்பருப்பில் பாதியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, மீதமுள்ள துவரம்பருப்புடன் சேர்க்கவும். அதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைக்கவும்.

சுற்றிலும் கொதிவந்து நுரை கட்டியதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை கொரகொரப்பாகப் பொடித்துச் சேர்த்து இறக்கி மூடிவைக்கவும். எண்ணெய் ஒரு டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, பொரிந்ததும் சாதத்தில் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து ரசத்தை நன்கு வடிகட்டி சிறிது சிறிதாக சாதத்தில் கலக்கவும். நன்கு கலந்து பின்னர் கொத்தமல்லித்தழை நெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

காளான் சீரக சம்பா பிரியாணி

தேவையானவை:

சீரக சம்பா - ஒரு கப்

காளான் - 12

வெங்காயம், தக்காளி - தலா 2

பச்சை மிளகாய் - ஒன்று

புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:

மிளகு - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள், தனியாதூள் - தலா அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று

காளான் சீரக சம்பா பிரியாணி

செய்முறை:

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். காளான், வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், சிட்டிகை உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு அரைத்த விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அதில் தயிர் சேர்த்துக் கலந்து, ஒன்றே முக்கால் கப் கொதிக்கும் நீர் சேர்க்கவும். அதனுடன் காளான், தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அரிசி சேர்த்து மூடி, மிதமான தீயில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து கிளறிப் பரிமாறவும்.

மாப்பிள்ளை சம்பா அவல் ஆப்பம்

தேவையானவை:

மாப்பிள்ளை சம்பா - ஒரு கப்

கெட்டி அவல் - கால் கப்

உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் (கெட்டியாக) - அரை கப்

உப்பு - தேவைக்கேற்ப

மாப்பிள்ளை சம்பா அவல் ஆப்பம்

செய்முறை:

மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் மற்றவற்றை (உப்பு, தேங்காய்ப்பால் நீங்கலாக) ஒன்றாகக் கலந்து நன்கு கழுவி ஊறவைக்கவும். 2 மணி நேரம் ஊறிய பின் நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6-8 மணி நேரம் புளிக்கவிடவும்.

அதில் தேங்காய்ப்பால் சேர்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, காய்ந்ததும் தீயைக் குறைத்து, மாவை ஒரு கரண்டி ஊற்றி, சுற்றி கனமாகத் தேய்க்கவும். மூடிவைத்து வேகவிட்டு எடுக்கவும். எண்ணெய் தேவையில்லை.


மேலும் படிக்க இட்லி, ஆப்பம், பிரியாணி... சிறுதானியங்களில் சிறப்பான வீக் எண்டு விருந்து
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top