பசுமைப் பள்ளித் திட்டம்: காய்கறி, மூலிகை, மீன் வளர்ப்பு அசத்தும் திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்கள்!

0

விவசாயம் மற்றும் சூழலியல் ஆர்வத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் தமிழகத்திலேயே முதல் முறையாக பசுமைப் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் காய்கறிகள், மூலிகை செடிகள் வளர்ப்பில் மாணவர்கள் ஈடுப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் தொடங்கப்பட்ட பசுமைப் பள்ளித்திட்டம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பசுமைப் பள்ளித்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். மாணவர்கள் விவசாயம் குறிந்து தெரிந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளவும் மற்றும் சூழலியல் பின்பற்றுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பசுமைப் பள்ளித்திட்டம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என முதல்வர் கூறியிருந்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழகத்திலேயே முதன்முறையாக பசுமைப்பள்ளி திட்டம் அமைக்கப்பட்டது. சுமார் ரூ 20 லட்சம் மதிப்பில் செயல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ எட்டரை லட்சத்தில் அப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்துள்ளார்.

செடிகள் வளர்ப்பில் அரசுப்பள்ளி

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி. கலைவாணன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ், தொழிற்கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருளிடம் பேசினோம், ''கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பில் வேளாண் பிரிவில் மட்டும் 40 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததன்படி எங்க பள்ளியில் பசுமைப் பள்ளித்திட்டம் அமைக்கப்பட்டது.

மூலிகை செடிகள்

25 சென்டில் குளிர்காலங்களில் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாலி ஹவுஸ் மற்றும் கோடை காலங்களில் தாவரங்களுக்கு பாதிப்பை உண்டாக்காத கிரீன் ஹவுஸ் அமைக்கப்பட்டது. இவற்றில் காய்கறி தோட்டம், மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், ஆடாதொடை, துளசி, கீழாநெல்லி போன்ற மூலிகை செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

பத்து சென்டில் வேறு பயிர்கள் பயிரிடுவது, அதில் தண்ணீர் சிக்கனம் கடைபிடிப்பதன் அவசியம் ஆகியவற்றிற்காக சொட்டு நீர்பாசனம், சுழற்ச்சி முறை நீர்பாசனம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. மேலும் பத்து சென்டில் விவசாயத்தில் என்னென்ன பாசன முறைகள் பின்பற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பாசன முறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பசுமைப்பள்ளி திட்டம் தொடக்க விழா அரசுப்பள்ளி

ஒரு சென்டில் குட்டை அமைத்து அதில் கெண்டை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. நெகிழி இல்லாத பள்ளி வளாகமாக இருக்க வேண்டும் என்பதே இதில் முத்தாய்ப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்காக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் போடுவதற்காக தனி தனியே தொட்டிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படு வருகின்றன. சூரியஒளி மின்சாரம் பெறுவதற்கான கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசுப்பள்ளி மாணவர்களிடையே பசுமைப்பள்ளி திட்டம் விவசாயம் மற்றும் சூழலியல் ஆர்வத்தை விதைக்கும். குறிப்பாக எங்க பள்ளி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக பசுமைப் பள்ளித்திட்டம் கிடைத்திருக்கிறது. மாணவர்கள் விளைவிக்க கூடிய காய்கறிகள் பள்ளியில் சத்துணவிற்கு பயன்படுத்தப்படும்.

பசுமைப் பள்ளித் திட்டம்

மாணவர்கள் விவசாய செயல்முறைகளை செய்து தெரிந்து கொள்கின்ற ஆய்வகமாகவும் இது திகழ்கிறது. மாணர்வர்கள் ஆர்வமாக காய்கறி, மூலிகை செடிகளை பராமரித்து வருகின்றனர். எங்க பள்ளியின் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் விவசாயம் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.


மேலும் படிக்க பசுமைப் பள்ளித் திட்டம்: காய்கறி, மூலிகை, மீன் வளர்ப்பு அசத்தும் திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top