ஈரோடு: ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; பேரூராட்சி கவுன்சிலருக்கு தொடர்பா?!

0

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நசியனூர், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அர்ஜுனன்,  நசியனூர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் கோவேந்திரன். இவர் சித்தோடு பேரூராட்சியில் 1-ஆவது வார்டின் தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். அர்ஜுனனின் ஹோட்டலுக்கு  அருகே இவரும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக மின் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சனிக்கிழமை அர்ஜுனனுக்கு சொந்தமான நாய் ஒன்று கோவேந்திரனின் ஹோட்டலுக்கு முன் சிறுநீர் கழித்து விட்டதாகத் தெரிகிறது. அந்த நாயை கோவேந்திரன் தாக்கியதாகத் தெரிகிறது. இதை கண்ட அர்ஜுனன் வாயில்லா ஜீவனை போட்டு அடிக்கிறாயே என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் இரவில் வியாபாரம் முடித்ததும், ஹோட்டலை மூடி விட்டு அர்ஜுனன் வீட்டுக்குச் சென்று விட்டார்.

சிதறிய ஹோட்டல்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அர்ஜுனனின் உணவகம் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் உணவகத்தின் மீது
பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு எஸ்கேப் ஆனார். இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டல் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசியதும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்தோடு போலீஸாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 30 நிமிடம் போராடி தீயணைத்தனர். எனினும் கடையின் முன் பகுதியில் இருந்த 2 குளிர்சாதன பெட்டிகள், பெஞ்ச், டேபிள்கள், பெயர் பலகை போன்றவை சேதமானது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

நிகழ்விடத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையின் முன்பு பொருத்தியிருந்த  சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில் பதிவாகியிருந்த மர்ம நபரின் முகம் தெளிவாக தெரிகிறது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசியதில் தி.மு.க. கவுன்சிலர் கோவேந்திரனுக்கு தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவேந்திரன், தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனனுக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் போட்டியால் இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க ஈரோடு: ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; பேரூராட்சி கவுன்சிலருக்கு தொடர்பா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top