கடலோர கர்நாடகம்: ஆளும்கட்சியின் `லவ் ஜிகாத்’ ஸ்கெட்ச்... பாஜக கோட்டையில் காலூன்றுமா காங்கிரஸ்?!

0

கர்நாடகத்தில் இன்னும், சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், காங்கிரஸ், பா.ஜ.க கட்சியினர் வாக்குறுதிகளை கூறி ஓட்டு சேகரித்து வருகின்றனர். மொத்தமுள்ள, 224 தொகுதிகளை, தலா ஏழு மாவட்டங்களை கொண்ட கல்யாண கர்நாடகம், கடலோர கர்நாடகம், வடக்கு மற்றும் தெற்கு கர்நாடகம், பெங்களூர் சுற்றுப்பகுதி என பிரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதில், கடலோர கர்நாடகத்தில், தக்‌ஷின கன்னடா, உடுப்பி, உத்திர கன்னடா ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன. நாள்தோறும் சமூக ரீதியான பிரச்னைகள், வன்முறைகள், சாதி ரீதியான சண்டைகள், கொலைகள் அரங்கேறி வரும் கடலோர கர்நாடகம் குறித்தும், வரும் தேர்தலுக்கான, பா.ஜ.க Vs காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் குறித்தும் பார்ப்போம்...

கடலோர கர்நாடகம்!

தக்‌ஷின கன்னடாவில் 20.8 லட்சம் மக்கள் தொகையில், 2.4 லட்சம் பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களாக உள்ளனர், மொத்தம் மக்கள் தொகையில், 67 சதவீதம் இந்துக்கள், 24 சதவீதம் இஸ்லாமியர்கள் மற்றும் 8.2 சதவீதம் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் உள்ளனர்.

உத்தர கன்னடாவிலுள்ள முர்தேஷ்வர் கோவில்.

உடுப்பி மாவட்டத்தில், 11.77 லட்சம் பேரில், 1.3 லட்சம் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளனர்; 85 சதவீதம் இந்துக்கள், 14 சதவீத சிறுபான்மை மக்கள் உள்ளனர். உத்தர கன்னடாவில், 14.5 லட்சம் மக்களில், 1.5 லட்சம் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளனர். மொத்தம் மக்கள் தொகையில், 82 சதவீதம் இந்துக்கள், 16 சதவீதம் சிறுபான்மை மக்கள் உள்ளனர்.

பா.ஜ.க வின் கோட்டை!

கடந்த முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தக்‌ஷின கன்னடத்தில் மொத்தமுள்ள, 8 தொகுதியில், 7 இடங்களில் பா.ஜ.க ஒரே ஒரு இடத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. உடுப்பியில் மொத்தமுள்ள ஐந்து தொகுதியும் பா.ஜ.க வசம் சென்றது. உத்தர கன்னடாவில், 6 தொகுதிகளில் நான்கு பா.ஜ.கவும், 2 காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் வசமிருந்த கடலோர கர்நாடகத்தை, முழுமையாக தங்கள் கோட்டையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.

கடலோர கர்நாடக வரைபடம்.

இந்த மூன்று மாவட்டங்களும் அரபிக்கடலோரம், கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ளது. பண்ட் சமூக பிரிவுகளாக ஷெட்டி, வர்மா, பண்ட் உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். மேலும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதிகம் உள்ளனர், கேரளா பகுதியிலிருந்து இஸ்லாமிய மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். கர்நாடகத்தில் மற்ற மாவட்டங்களைக்காட்டிலும், நாள்தோறும் சமூக மற்றும் சாதி ரீதியான பாகுபாடு, பிரச்னைகள், கலவரங்கள், கொலைகள் அரங்கேறுவது, கடலோர கர்நாடகத்தில் தான் அதிகம். சமூக கலவரத்தால் மட்டுமே ஓராண்டில், எட்டு பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

கடலோர கர்நாடக இந்து அமைப்புகளின் பேரணி.

லவ் ஜிஹாத் – இந்துத்துவம்!

தேர்தல் நெருங்குவதால், இந்துக்களின் ஓட்டுக்களை கவர, இங்குள்ள பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி, இங்கு வரும் பா.ஜ.க தலைவர்கள், ‘இந்துத்துவம், இந்துக்கள் பாதுகாப்பு, மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு,’ போன்றவற்றை மட்டுமே அதிகம் பேசி, வாக்குக்களை கவர முயன்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக, லவ் ஜிஹாத்தை கையிலெடுத்துள்ளனர் எனவும், அரசியல் விமர்சகர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் கூட மங்களூரில் பா.ஜ.க மாநிலத்தலைவரும் எம்.பியுமான நளின் குமார் கட்டீல், ‘``கட்சித்தொண்டர்களே பொதுப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டாம், லவ் ஜிஹாத் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்,’’ எனப்பேசியது சர்ச்சையானது.

பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல்.

‘நெகடிவ் போலிங்’ – காங்கிரஸ் வியூகம்...

கடலோர கர்நாடக்தை கைப்பற்ற இந்துத்துவத்தை கையெலெடுத்துள்ள பா.ஜ.கவை வீழ்த்த, காங்கிரஸ் கட்சியினர், ‘‘பா.ஜ.க கடலோர கர்நாடகத்தை இந்துத்துவ ஆய்வகமாக மாற்றியுள்ளது, பா.ஜ.கவால், இங்கு மதக்கலவரம், கொலைகள் அதிகம் நடக்கிறது,’’ என்பது போன்ற, பல கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

மேலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத்தலைவர் டி.கே சிவக்குமார் என, அனைத்து தலைவர்களும் வாரம் இருமுறையாவது கடலோர கர்நாடகத்துக்கு சென்று, அனைத்து சமுதாய தலைவர்களை சந்தித்து, வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

குறிப்பாக பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலையிலுள்ள சிறுபான்மை மக்கள், பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள், மீனவர்களை கவர, கங்கணம் கட்டிக்கொண்டு சுழன்று வேலை செய்து வருகின்றனர்.

10 அம்ச வாக்குறுதி...

முக்கியமானதாக கடலோர கர்நாடகத்துக்காக, 10 அம்ச பிரத்தியேக தேர்தல் வாக்குறுதியையும் வெளியிட்டுள்ளனர். ‘சிறுபான்மை மக்கள் நலனுக்கான பட்ஜெட் அதிகரிப்பு, மீனவர்களுக்கு 10 லட்சம் காப்பீடு, மீன்பிடி படகுக்கு ரூ.25 லட்சம் மானியம், மால்பே பகுதியில் புதிய துறைமுகம், கடலோர கர்நாடகத்தில் சுற்றுலா, தொழில், வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு, 2,500 கோடி ஒதுக்குதல், பெங்களூருக்கு அடுத்தபடியாக மங்களூரை ஐ.டி ஹப் ஆக மாற்றுதல்,’ உள்பட, 10 அம்ச வாக்குறுதியை வெளியிட்டுள்ளனர்.

பா.ஜ.க வின் கடலோர கர்நாடக கோட்டையை தகர்த்து, கடலோர கர்நாடகத்தில் காங்கிரஸ் காலுான்றுமா என்பதை, தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்; பொறுத்திருந்து பார்ப்போம்..!


மேலும் படிக்க கடலோர கர்நாடகம்: ஆளும்கட்சியின் `லவ் ஜிகாத்’ ஸ்கெட்ச்... பாஜக கோட்டையில் காலூன்றுமா காங்கிரஸ்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top