முடங்கிய அமெரிக்க விமான சேவை: காரணம் ரஷ்யாவா... தொழில்நுட்ப கோளாறா?

0

உலகம முழுவதுமுள்ள விமான நிலையங்களில் விமானப் பணிகளுக்கான அறிவிப்பு அமைப்பில் NOTAM எனும் கட்டுப்பாட்டு அறை இருக்கும். இந்த அறையிலிருந்து அந்தப் பகுதிக்குள் வரும் விமானத்துக்கான ஆணைகள், சிக்னல் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும். அமெரிக்காவில் இருக்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவின் அனைத்து விமானங்களும் அந்தந்தப் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களில் தரையிறங்க உத்தரவிடப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

கட்டுப்பாட்டு அறையின் இந்த உத்தரவால் 5000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 5 மணி வரை குறைந்தபட்சம் 9,207 விமானங்கள் அமெரிக்காவிற்குள் வரவிருந்த அல்லது அங்கிருந்து புறப்பட இருந்த விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் 1,309 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்பு தளமான FlightAware தெரிவித்துள்ளது.

இந்த குழப்பத்தால் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அதன் திட்டமிடல் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அடுத்த எட்டு நாட்களின் 1500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருக்கிறது. விமான சேவைகளில் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்தால் அமெரிக்க விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

விமானம் தாமதம்

இந்த நிலையில், ரஷ்யா - அமெரிக்காவுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துவருவதால், இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என தகவல் வெளியானது. இதற்கு முன்னர், ரஷ்யாவில் இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, கடலுக்கு அடியில் ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ராட்சதக் குழாய் மர்மமான முறையில் தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

எனவே, இதற்கு எதிராக ரஷ்யா நிகழ்த்திய சைபர் தாக்குதலாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகை, உடனடியாக இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,"இது சைபர் தாக்குதல் என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஆய்வாளர்கள் இந்த சிக்கல் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்" என விளக்கமளித்திருக்கிறார். விமான சேவை தொடர்பாக எப்போதும் பதிலளிக்காத வெள்ளை மாளிகை முதன்முதலாக தானே விளக்கமளித்திருப்பது கவனிக்கப்படவேண்டியது.

அமெரிக்க விமானம்

போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக், "இந்த சிக்கலுக்கான மூலக் காரணங்களைத் கண்டுபிடிப்பதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் FAA முயன்று வருகிறது. மேலும், இது இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவைகளிலும் பாதிப்பு இல்லை. அமெரிக்கா விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்" என்று தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க முடங்கிய அமெரிக்க விமான சேவை: காரணம் ரஷ்யாவா... தொழில்நுட்ப கோளாறா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top