புதுக்கோட்டை: ``நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழகத்துக்கே அவமானம்” - துரை வைகோ

0

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அந்த கிராமத்தை ம.தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பார்வையிட்டார். ஒவ்வொரு வீடாகச் சென்றவர், இந்த செயலில் ஈடுபட்டதாக, யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்ற பட்டியலின மக்களிடம் கேள்வியை எழுப்பினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, மிகவும் இழிவான செயல், கண்டிக்கத்தக்கது. விஞ்ஞான உலகில் இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடமையான தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இது போன்ற செயல் தமிழகத்தில் வேறு எங்கும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிவான செயல் நடைபெற்றது தமிழகத்திற்கு அவமானம். ஒவ்வொரு தமிழனுக்கும் இது அவமானம். ஆறறிவு படைத்த மனிதன் சக மனிதனுக்கு இது போன்ற இழிவான செயலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வளரும் தலைமுறைகளை முறையாக படிக்க வைத்து அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய இந்த காலகட்டத்தில், சாதிக் கலவரங்கள்,மதக் கலவரங்கள் தூண்டுவதைப் போல சில சமூகவிரோதிகள் இதுபோன்று ஈடுபடுவது வேதனை.

தமிழக அரசு, காவல்துறை இது தொடர்பான நடவடிக்கை எடுத்து வருகிறது, 24 மணி நேரமும் காவல்துறையும் ஆட்சியரும் பொதுமக்களைக் கண்காணித்து பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதனால் மக்கள் தான், குறிப்பாக, சாதி மத இன வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து விட்டு நாம் அனைவரும் மனிதர்கள் என்று மனிதநேயத்துடன் பழக வேண்டும்.

இது முழுமையாக ஒழிய, மக்கள் திருந்தி சாதி, மத வேறுபாட்டால் நம்மை பிரிக்க முடியாது என்று ஒருமித்த கருத்தோடு இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும். சாதிய அமைப்புகள் சாதி ரீதியாக செயல்பட கூடியவர்கள் இது போன்று செயல்பட்டால் நம்மை மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றும். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இறையூர் மட்டுமின்றி இது போன்ற செயல் எங்கு இருந்தாலும் ம.தி.மு.க குரல் கொடுக்கும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதை மதிமுகவின் நோக்கம். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இறையூர் நிகழ்வு தொடர்பாக ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் வரை நாங்களும் ஓயமாட்டோம் மக்களுடன் சேர்ந்து நிற்போம்.

அரசியல் இயக்கங்களில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவர்களுக்கும் ஒரு கொள்கை ஒரு சித்தாந்தம் இருக்கலாம், அந்தக் கொள்கையின் படி அவர்கள் கொள்கைகளை சித்தாந்தத்தை மக்களிடம் சென்று அதை பரப்பி வருகின்றனர். அதே நேரத்தில் பத்திரிகையாளர்கள் அவர்களது கடமையைச் செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நிலைபாடு உள்ளது. அதன்படி பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளிடம் கேள்விகளை முன்வைக்கின்றனர் அந்த கேள்வியை கேட்கும் போது அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டியது அவர்களது கடமை. அதை விடுத்து பத்திரிகையாளர்களை அவமானப்படுத்துவது தவறான செயல்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை இது போன்று பேசுவது எதிர்கால அரசியலுக்கும் நல்லது இல்லை அவரது இயக்கத்திற்கும் இது நல்லது இல்லை" என்றார்


மேலும் படிக்க புதுக்கோட்டை: ``நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழகத்துக்கே அவமானம்” - துரை வைகோ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top