Doctor Vikatan: சில உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது ஏன்?

0

Doctor Vikatan: சில வகை உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துவது ஏன்? அந்த உணவுகளை எப்படித் தெரிந்துகொள்வது? வயிற்று உப்புசத்துக்கு உணவுகள்தான் காரணமா அல்லது வேறு பிரச்னைகளால் அப்படி ஏற்படுகிறதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பிஸ்கட், பிரட், நான், குல்ச்சா, பரோட்டா போன்று மைதா சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நிறைய நேரம் எடுக்கும். அதனால் இவற்றைச் சாப்பிட்டதும் வயிறு கனத்தது போல ஓர் உணர்வு ஏற்படும். அந்த உணர்வைப் போக்க உடனே சோடா குடிப்பார்கள். சோடா குடித்து ஏப்பம் வந்ததும், வயிறு லேசானது போல உணர்வார்கள். எனவே, மைதா உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.

புராசெஸ்டு உணவுகள், அல்ட்ரா புராசெஸ்டு உணவுகள் என இருவகை உள்ளன. அரிசியை பாலிஷ் செய்து வெள்ளையாக மாற்றுவது புராசெஸ்டு வகையில் வரும். அதே அரிசியில் நிறமிகள், இனிப்பு, செயற்கை சுவையூட்டிகள், ப்ரிசர்வேட்டிவ் எல்லாம் சேர்த்து பிஸ்கட்டாகவோ, வேறு உணவாகவோ மாற்றுவது அல்ட்ரா புராசெஸ்டு வகையில் வரும். அல்ட்ரா புராசெஸ்டு உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.

சில உணவுகளில் ஃப்ரூட் சால்ட் எனப்படும் உப்பு சேர்ப்பார்கள். உதாரணத்துக்கு வீட்டில் ரவா இட்லியோ, ரவா தோசையோ தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கான பொருள்களைச் சேர்த்து சில மணி நேரம் ஊற வைத்துப் பிறகுதான் செய்வோம். அதுவே நேரமின்மை காரணமாகச் சிலர் இன்ஸ்டன்ட் மிக்ஸை கடைகளில் வாங்கிச் செய்வார்கள். அதில் சோடா பை கார்பனேட் சேர்க்கப்பட்டிருக்கும். அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

சிலருக்கு பால்கூட வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். சிலர் நாள் முழுவதும் நிறைய பால் குடித்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இருக்காது. சிலர் காபிக்காக சிறிது பால் சேர்த்துக் குடித்தாலும் வயிற்று உப்புசம் வரும். அது நம் செரிமான சக்தியைப் பொறுத்தது.

சிலருக்கு என்ன உணவு சாப்பிட்டாலும் செரிக்கும். வேறு சிலருக்கு அதற்கு நேரெதிராக இருக்கும். பால் குடித்திருப்பார்கள். அதே நாளில் மில்க் ஸ்வீட் சாப்பிட்டிருப்பார்கள். அளவு அதிகரிக்கும்போது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.

என்னவெல்லாம் சாப்பிடும்போது அப்படி ஏற்படுகிறது என்று தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம்தான் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் உணவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். நீர்மோர் குடிப்பது, புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவது, திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் உங்கள் உடல் லேசாக இருப்பதை உணரலாம்.

Stomach (Representational Image)

சிலர், கண்ட நேரத்துக்கு கண்டதையும் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எளிதில் செரித்துவிடும். வேறு சிலருக்கு அப்படி இருக்காது. அதேபோலதான் சில உணவுகளைச் சாப்பிடும்போது சிலருக்கு உடல்எடை கூடும். இன்னும் சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எடை கூடாது. வயிற்று உப்புசமும் அப்படித்தான். மைதா மற்றும் அல்ட்ரா புராசெஸ்டு உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது இயல்புதான். சோடா, ஈஸ்ட் உள்ளிட்டவை சேர்த்த உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் அதிகரிக்கும்.

ராஜ்மா, கொண்டைக்கடலை மாதிரியான கடலை வகைகள், பால் போன்றவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் வயிற்று உப்புசம் அதிகமிருக்கும். புளித்த ஏப்பம், எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்றவையும் வரலாம். அடிக்கடி இன்ஸ்டன்ட் உணவுகள் சாப்பிடும்போது இப்படி ஏற்பட்டால் அந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: சில உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது ஏன்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top