Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?

0

Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டு விடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதை குணப்படுத்தவே முடியாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை

விட்டிலிகோ அல்லது வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. அதாவது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பாற்றலே நமக்கு எதிராக மாறுவது. அந்த வகையில் விட்டிலிகோ விஷயத்திலும், நம் உடலின் வெள்ளை அணுக்களே, சருமத்துக்கு நிறம் கொடுக்கும் நிறமிகளைச் சிதைத்துவிடுகிறது.

நமது சருமத்துக்கு நிறம் கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகள் குறிப்பிட்ட இடத்தில் செயலிழந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். விட்டிலிகோ பாதித்தவர்களுக்கு சருமம், பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். பிரவுன் நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் இல்லாததுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம்.

இந்த பாதிப்பு உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அல்லது உடல் முழுவதும் என எப்படி வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பேட்ச் போல வரலாம். பாதிப்பு எப்படிப் பரவுகிறது என்பதைப் பொறுத்து அதை வகைப்படுத்துவோம்.

பொதுவாக இந்த பாதிப்பை 20 முதல் 30 வயதில் கண்டுபிடிக்கிறோம். அரிதாக குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு வரும்போது நோயை கணிப்பது சற்று சுலபம். பெரியவர்களுக்கு அதிலும் பரவலாக வரும்போது அது சற்று கடினம். உதடுகளில், விரல் நுனிகளில், கால்களில், அந்தரங்க உறுப்பு முனைகளில் வரும் வெண்புள்ளி பாதிப்பை கணிப்பது சற்று சிரமம்.

தாத்தா, பாடடிக்கோ, பெற்றோரில் யாருக்காவதோ இந்த பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு வர 10 முதல் 15 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. தைராய்டு, புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், சில வகை மருந்துகளின் விளைவு என இதற்கு வேறு காரணங்களும் உண்டு. பாதிப்பின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்துதான் சிகிச்சை முடிவு செய்யப்படும். சிறிய அளவிலான பேட்ச் போன்ற பாதிப்புகளுக்கு க்ரீம் மூலமே தீர்வு காணலாம். உடல் முழுவதும் பரவுகிறது என்ற நிலையில் சில பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

வெண்புள்ளி

நம் எதிர்ப்பு சக்திக்கும் சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தைக் குறைக்கும்வகையில் கார்ட்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மாத்திரைகள், க்ரீம்களை தாண்டி லைட் தெரபியும் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். லேசர் சிகிச்சைகளும் உதவலாம். இவை தவிர அறுவை சிகிச்சையும் ஒரு தீர்வு. அதாவது இரண்டு வருடங்களாக விட்டிலிகோ பரவியிருக்கக்கூடாது, அளவு பெரிதாகியிருக்கக்கூடாது. அப்படியிருந்தால் வேறோர் இடத்திலிருந்து மெலனினை கொண்டுவந்து பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி அறுவை சிகிச்சை செய்யலாம்.

வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றபடி எந்த உறுப்பையும் பாதிக்காது. எந்த இடத்தில் நிற மாற்றம் ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் உள்ள முடியும் வெள்ளையாக மாற வாய்ப்புண்டு. மற்றபடி இது பயப்படும்படியான பிரச்னை இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top