Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?

0

Doctor Vikatan: சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே... உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கல் கரையுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னை

சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால் அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம். சிறுநீரகங்களில் கற்கள் இருந்தால், சித்த மருத்துவரை சந்தித்து, கற்களின் அளவு, அது எந்த மாதிரியான கல் என்பதையெல்லாம் பார்த்து அதற்கேற்ப மருத்துவர் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுக்க வேண்டும்.

கல்லின் அளவு மற்றும் தன்மைக்கேற்ப கூடுதலாக சில சிகிச்சைகள் தேவைப்படும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சில் முள் சாதாரணமாக நிலங்களில் காணப்படுவதுதான். வெறும் கால்களில் நடக்கும்போது இந்த முள் குத்திய அனுபவம் பலருக்கும் இருக்கும். சிறுநீரகக் கற்களின் அளவு பெரிதாக இருக்கும்போது முதலில் அவற்றை உடைக்க வேண்டும். பிறகு வெளியே தள்ள வேண்டும். நெருஞ்சில் முள் கஷாயத்துக்கு சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு.

சிறுநீரகக் கற்கள் இருந்தால் சிறுநீர்த் தொற்றும் வரும். அந்தத் தொற்று வராமல் தவிர்க்கவும் நெருஞ்சில் முள் உதவும். சிறுநீரகக் கற்களால் ஏற்படும் தொற்று, தொற்று இருப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது என இரண்டுக்கும் இது உதவும். சிறுநீரகச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தக் கூடியதும்கூட.

சிறு நெருஞ்சி

நெருஞ்சில் முள் பொடியை 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். அதை 200 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். எப்போதுமே கஷாயங்களை சிறுதீயில்தான் கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கலாம். நெருஞ்சிலுடன் ஓமம் மற்றம் சீரகம் தலா 5 கிராம் சேர்த்துக்கொள்ளலாம். விரும்பினால் தனியாவும் 5 கிராம் சேர்த்துக்கொள்ளலாம். இதை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் கஷாயம் குடிப்பது ஏற்றுக்கொள்ளாது என்பவர்கள், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.

இதையே உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். பச்சரிசியைக் கொதிக்கவைத்து, அதில் சீரகம், சின்ன வெங்காயம், நெருஞ்சில் முள் போன்றவற்றை துணியில் மூட்டையாகக் கட்டி கஞ்சியோடு சேர்த்துக் கொதிக்க வைப்பார்கள். கொதித்ததும் அந்த மூட்டையை அகற்றிவிடுவார்கள். பிறகு அந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு. ஆனால் நெருஞ்சில் முள் அளவுக்கு அது பலன் தராது. வாழைத்தண்டு சாற்றை அடிக்கடி குடிக்கக்கூடாது. நம் உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.

சிறுநீரகக் கற்கள்

இவை குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. அடிக்கடி வாழைத்தண்டு சாறு குடிக்கும்போது இந்தச் சத்துகளின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். அதன் விளைவாக தசைவலி வரலாம். அதனால் மருத்துவ ஆலோசனையோடு வாரத்துக்கு 2 நாள்கள் மட்டும் இதைக் குடிக்கலாம். வாழைத்துண்டு சாற்றுக்கு பதில், வாழைக்கிழங்கைத் தோண்டி எடுத்து அதன் தண்ணீரை அடிக்கடி குடிப்பது பலன் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top