கோவில்பட்டி: ரூ.10 லட்சம் கேட்டுக் கடத்தப்பட்ட கோயில் பூசாரி; சிசிடிவி பதிவால் மீட்ட போலீஸார்..!

0

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம். இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அவரின் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள சாய்லிங்கா ஆலயத்தில் பூசாரியாக இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு  9 மணிக்கு கோயிலில் பூஜையை முடித்து விட்டு, உமையலிங்கமும், அவரின் நண்பரான கோமதிராஜூவும் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்குச் சென்று கொண்டிருந்தனர். 

கோவில்பட்டி

அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பூசாரி உமையலிங்கத்தை வழி மறித்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. காரிலிருந்து இறங்கிய 5 பேருடன், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 6 பேர் சேர்த்து உமையலிங்கம், கோமதிராஜ் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். கோமதிராஜை துரத்தி விட்டுவிட்டு, உமையலிங்கத்தின் கை, கால்களை கட்டி காரின் பின் இருக்கையில் அமர வைத்துக் கொண்டு கடத்திச் சென்றனர்.

 உமையலிங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தை கோமதிராஜ் அவரின் மனைவி மனிஷாவிடம் கூறினார். அவர் கணவர் கடத்தப்பட்டது குறித்து  கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் ஆகியோரின் தலைமையிலான போலீஸார்,பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.  உமையலிங்கம் கடத்தப்பட்ட காரின் பதிவெண்ணை  வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த கார், சாத்தூர் பகுதியில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே உமையலிங்கத்தின் மனைவிக்கு போன் அந்த கும்பல், `10 லட்ச ரூபாய்  கொடுத்தால்தான், அவரை விடுவிப்போம்' என மிரட்டியிருக்கின்றனர். இதனையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி மனிஷா, அந்த கும்பலைத் தொடர்பு கொண்டு `7 லட்ச ரூபாய்தான் தர முடியும்' எனச் சொல்லி பேசியிருக்கிறார். அந்த கும்பலும் சம்மதித்து பணத்துடன்   ராஜபாளையத்துக்கு வரும்படி கூறியிருக்கின்றனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

இதனையடுத்து, மனிஷாவும் ,கோமதிராஜூம் ராஜபாளையத்துக்குச் சென்றனர். அங்கு பஜாரில் கார் வந்து நின்றது. மறைந்திருந்த போலீஸார், காரை சுற்றிவளைக்க முயன்றனர். இதனைப் பார்த்து, காரிலிருந்து 6 பேர் தப்பியோடினர். காரை ஓட்டுவந்த ஓட்டுநர் மனோகர் மட்டும் சிக்கினார். உடனடியாக காரில் இருந்த பூசாரி உமையலிங்கத்தை மீட்ட போலீஸார் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 6 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.  


மேலும் படிக்க கோவில்பட்டி: ரூ.10 லட்சம் கேட்டுக் கடத்தப்பட்ட கோயில் பூசாரி; சிசிடிவி பதிவால் மீட்ட போலீஸார்..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top