4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்; தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

0

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள பிலிப்பட்டி  அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிக்காகச் சென்றிருக்கின்றனர். 

விளையாட்டுப் போட்டிகளை முடித்துவிட்டு, கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணையைப் பார்ப்பதற்காக, மாணவ, மாணவிகளை ஆசிரியர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஆற்றுக்குள் இறங்கிய தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய நான்கு மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்

தீயணைப்புத்துறையினர், 4 பேரையும் சடலமாகவே  மீட்டிருக்கின்றனர். மாணவிகள் இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மாணவிகள் இறந்த செய்தியை அறிந்து, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதவாறே பள்ளி முன்பு குவிந்தனர். அப்போது, மாணவிகளின் பெற்றோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ``விளையாட்டுப் போட்டிக்குச் சென்றவர்களை ஏன் ஆற்றுக்குக் கூட்டிச் சென்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர், இலுப்பூர் டி.எஸ்.பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். அப்போது பேசிய இறந்த மாணவிகளின் உறவினர்கள், "விளையாட்டுப் போட்டிக்கு போயிட்டு, வெற்றியோட திரும்புவாங்க, வெற்றி மாலை போடலாம்னு இருந்தோம். ஆனா, இன்னைக்கு இறந்துபோன எங்க பிள்ளைகளுக்கு மாலை போட வேண்டிய நிலைமை வந்திருச்சு. விளையாட்டுப் போட்டிக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறி, ஆற்றுக்கு கூட்டிக்கிட்டு போனதோடு, குழந்தைகள் நீரில் மூழ்கும் அளவுக்கு அலட்சியமா இருந்துருக்காங்க. 

அலட்சிய அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்" என்றனர். மேலும், பெற்றோர்கள் இல்லாமல் உடற்கூறாய்வு செய்ததைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கவனக்குறைவாகச் செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகாயு இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க 4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்; தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top