சிவகாசி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, கழிவறைக்குள் சுமார் 5 மாத ஆண் சிசு இறந்த நிலையில்கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``சிவகாசி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில், வழக்கம்போல் மருத்துவமனை ஊழியர்கள் நேற்று சுகாதாரப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது, மகப்பேறு வார்டின் கழிப்பறையை சுத்தம் செய்ய சென்றபோது, கழிவறைக்குள் சுமார் 5 மாத சிசு இறந்தநிலையில் கிடந்ததை, பெண் ஊழியர் ஒருவர் பார்த்திருக்கிறார். இது தொடர்பாக, அங்கு பணியிலிருந்த செவிலியர்களிடம் தெரிவித்ததில் அவர்களும் சிசு இறந்துகிடப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி காவல்துறையின் சிசுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள், காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். 5 மாத சிசுவின் உடல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற்று வருபவர்களிடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால், சிசுவின் உடலை கழிவறையில் வீசிச் சென்றவர்கள் யாரென்பது தெரியவில்லை" என்றனர்.
மேலும் படிக்க சிவகாசி: அரசு மருத்துவமனை கழிவறையில் கிடந்த 5 மாத ஆண் சிசுவின் சடலம்! - விசாரணையில் போலீஸ்