மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை; என்ன பிளான் வைத்திருக்கிறார் பன்னீர்?!

0

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க சார்பில் தென்னரசும் போட்டியிடுகிறார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்யும் தென்னரசு

முன்னதாக, 2022-ம் ஆண்டு, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, இடைத்தேர்தலுக்காக எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ``இடைத்தேர்தலில் வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி, பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று, எடப்பாடி தரப்பின் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்பதால், பன்னீர் தரப்பில் நிறுத்தப்பட்ட செந்தில் முருகனை வாபஸ் பெற போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இரட்டை இலைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார் பன்னீர்.

ஓ.பன்னீர்செல்வம், செந்தில் முருகன் (வேட்பாளர்)

அதற்காக பன்னீர் தரப்பு வழங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியலை, சட்டவிதிகளின்படி ஏற்க முடியாது என கருதி தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், பன்னீரின் பயணம் முடங்கியது. அவரின் ஆதரவாளர்களும் முடங்கினர். இந்த நிலையில்தான், தனது தரப்பில் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் 20-ம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் பன்னீர். 

இது குறித்து அவரது அணியின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்." இடைத்தேர்தலுக்காக எங்கள் தரப்பு சார்பாக நிறுத்தப்பட்ட செந்தில் முருகன் ஏற்கேனவே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எடப்பாடி தரப்புக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு கடிதம் கொடுத்தது, எங்களுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து வந்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஈரோடு இடைத்தேர்தலிலிருந்து பின்வாங்குவதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பில் நிலவிய குழப்பத்தால் வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை.

ஓபிஎஸ் - அதிமுக

இதனால், முன்மொழியகூட ஆள் இல்லாமல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்துதான், இரட்டை இலைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தொம். ஆனால், இதை எப்படியோ மோப்பம் பிடித்த எடப்பாடி தரப்பு, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து முட்டுக்கட்டை போட்டது. இதனால், எங்கள் தரப்பும் மிகவும் சோர்வாகிவிட்டது. இதன் காரணமாக, கடந்த 13-ம் தேதி ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், ஈரோடு இடைத்தேர்தலில் நமது பங்களிப்பு எதுவுமே இல்லையென்றால் அரசியல் வெளிச்சத்திலிருந்து நாம் மறைந்துவிடுவோம், என்று பேசப்பட்டது.

அதற்காக, எடப்பாடி தரப்பு தடை ஏற்படுத்தினாலும், இரட்டை இலைக்காக வாக்குச் சேகரிக்கலாம் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார். ஆனால், சீனியர்களுக்கு அதில் உடன்பாடில்லை. அதேபோல, எங்கள் தரப்பு ஆதரவு அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுக்கூட்டம் போடலாம் என்று பேசப்பட்டது. ஆனால், `இது குறித்து நாமே முடிவு எடுக்க வேண்டாம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்

நமது தரப்பிலிருக்கும்  மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம்' என்று முடிவானது. அதேபோல, சின்னம்மாவைச் சந்தித்து ஆலோசனை செய்யலாமா என்றும் பேசப்பட்டது. அதன்படி, தேர்தலில் பிரசாரத்துக்குப் போகலாமா வேண்டாமா, அடுத்தக் கட்டப் பணிகள் என்ன என்பது குறித்து முடிவெடுக்க அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்றனர் விரிவாக.


மேலும் படிக்க மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை; என்ன பிளான் வைத்திருக்கிறார் பன்னீர்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top