அதானி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியும், மத்திய அரசின் மௌனமும்! - என்ன சொல்கிறது தமிழ்நாடு பாஜக?

0

அதானி விவகாரம் குறித்துத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற அவைகளே முடங்கின. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, அதானி விவகாரம் குறித்து வாய்திறக்காதது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதற்கிடையே, ``தற்போதைய வெளியுறவுக் கொள்கை அதானியின் வணிக மேம்பாட்டுத் துறையாகவே இருக்கிறது. அதானியுடன் எத்தனை முறை ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறீர்கள்?" என மோடியை நோக்கி கேள்விகளைத் தொடுத்தார் ராகுல். கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க-வுக்கு அதானி எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார் எனக் கேள்வியெழுப்பிய ராகுல், பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அதானிக்கு அதிக கடன் வழங்கப்பட்டதாகவும், அதனால்தான் அதானி குழுமத்தின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் சாடினார்.

ராகுல் காந்தி

`` `இலங்கை காற்றாலை மின்சாரத் திட்டத்தை அதானிக்கு வழங்க வேண்டும்' என இலங்கை முன்னாள் பிரதமர் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார வாரிய தலைவர் நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் தெரிவித்திருக்கிறார்" என்பதை நாடாளுமன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார் எம்.பி ராகுல் காந்தி.

கனிமொழி

அதேபோல, ``ஒன்றிய அரசு அதானிக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாக இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. அதானி குறித்துப் பேசினால் தேசத்துக்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறோம். அதானியை எதிர்த்துப் பேசுவது எப்படி இந்தியாவை எதிர்த்துப் பேசுவதாக ஆகும்?" என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார் எம்.பி கனிமொழி. எம்.பி-க்கள் ராகுல் காந்தி, கனிமொழியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, திருச்சி சிவா, காங்கிரஸ் எம்.பி-க்கள் சிலரும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

மோடி, ராகுல்

நாடாளுமன்ற அவையில் பா.ஜ.க அரசு செய்தவற்றையும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனத்தை மட்டுமே முன்வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அதானி குறித்த எந்த ஒரு கருத்தையும் அவர் பேசவில்லை. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்.பி ராகுல் காந்தி, அதானி விவகாரங்களைப் பற்றி பேசாததைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியை விமர்சித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்

”நான் எந்த கடினமான கேள்வியையும் கேட்கவில்லை. அதானி உங்களுடன் எத்தனை முறை பயணித்தார்... எத்தனை முறை நீங்கள் அவரை சந்தித்திருக்கிறீர்கள்... அதானி உங்கள் நண்பர் இல்லையெனில், அதானிமீது விசாரணை நடத்தப்படும் என நீங்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால், அதானி குறித்து நீங்கள் பேசவில்லை. இதன் மூலம் அதானி உங்கள் நண்பர் என்பது தெளிவாகிறது” என்றார் ராகுல் காந்தி.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், “அதானி செய்திருக்கும் மோசடிகள் குறித்து 12 மணி நேரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசியிருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி அது குறித்து வாய்திறக்காமல் எதிர்க்கட்சிகளை விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடியால் அதானி விவகாரம் குறித்து பதில் சொல்லவே முடியாது. இந்த அரசாங்கத்தின் வேலையே கார்ப்பரேட் நிறுனவங்களைப் பாதுகாப்பதும், அவர்கள் நலன் சார்ந்து இயங்குவதும்தானே. உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி பத்து ஆண்டுகளுக்கு முன்பு 609-வது இடத்திலிருந்தவர், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டியலில் அதன் உச்சிக்கு எப்படி வர முடிந்தது... லெட்டர் பேடு நிறுவனங்களை வைத்து மோசடி செய்த அதானியின் வளர்ச்சிக்கு மோடி அரசினுடைய ஆதரவு, உதவி மற்றும் பிரதமரின் தனிப்பட்ட உதவிகளின்றி இந்த நிலைக்கு அதானியால் வரமுடியாது. ஆகவேதான் பிரதமர் மோடி அதானி விவகாரம் குறித்துப் பேசாமலிருக்கிறார்" என்றார்.

நாராயணன் திருப்பதி

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நம்மிடம் பேசுகையில், ``கம்யூனிஸ்ட்டுகள் இந்த நாட்டை பிடித்த கொடிய நோய். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதானி விவகாரத்தில் நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை. இது இரு தனியார் நிறுவனங்களுக்கிடையேயான பிரச்னை. அதற்கு அவர்கள் பதில் தந்துவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் நாட்டின் பாதுகாப்புகள் குறித்தும் பேசுவதை விட்டுவிட்டு, தனியார் நிறுவனங்களின் மூலம் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் பேசுகிற இடைத்தரகர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

`அதானியை பா.ஜ.க அரசு பாதுகாக்கிறது' என்ற கனிமொழி எம்.பி-யின் விமர்சனம் குறித்துக் கேட்டோம். அதற்கு பதிலளித்தவர், ``அதானியை பா.ஜ.க காப்பாற்றுகிறது என்றால், இங்கே தொலைக்காட்சி ஒன்றையும், சினிமா ப்ரொடக்ஷன் நிறுவனம் ஒன்றையும் பாதுகாப்பது யார்?" என்றார் காட்டமாக.


மேலும் படிக்க அதானி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியும், மத்திய அரசின் மௌனமும்! - என்ன சொல்கிறது தமிழ்நாடு பாஜக?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top