தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை; உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! - சேலத்தில் பதற்றம்

0

தமிழக- கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன் பாலாறு இணைகிறது. இங்கிருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் இருக்கின்றன. மலையோர தமிழக கிராமங்களிலிருந்து செல்லும் சிலர், பாலாற்றை பரிசலில் கடந்து சென்று கர்நாடக வனப்பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம்.

அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சேலம் மேட்டூரை அடுத்த கோவிந்தபாடி, தர்மபுரி மாவட்டம், ஏமனூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பரிசல்களில் சென்றிருக்கின்றனர். கர்நாடக வனப்பகுதியில் பாலாற்றங்கரையில் இருந்தபடியே மீன் பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். அதில் சிலர் தப்பி மேட்டூர் பகுதி கிராமங்களுக்கு வந்துவிட்டனர்.

சடலம்

ஆனால், மேட்டூர் கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த கார வடையான் என்கிற ராஜா மட்டும் காணவில்லை. இதனால் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகியிருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை ராஜாவின் ஆற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இந்தத் தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், அவர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வேட்டைக்குச் சென்ற தமிழக மீனவர்கள்மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி என்பவர் பலியானார். அப்போது வெகுண்டெழுந்த கிராம மக்கள் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடக வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாலாற்றிலுள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடிக்கு கர்நாடகா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கர்நாடக வனத்துறையைக் கண்டித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கைதுசெய்யப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவர் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீன் பிடிக்கச் சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை; உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! - சேலத்தில் பதற்றம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top