லாட்டரியில் வென்ற பணத்தில் முன்னாள் மனைவிக்கு வீடு; மனைவியிடம் மறைத்த கணவருக்கு அதிரடி உத்தரவு!

0

சீனாவில், லாட்டரியில் வென்ற ரூ.12 கோடியைப் பற்றி மனைவியிடமிருந்து மறைத்து, தன்னுடைய முன்னாள் மனைவிக்கு வீடு வாங்கிக் கொடுக்க உதவிய நபருக்கு நீதிமன்றம் ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

முன்னதாக, Zhou என்ற குடும்பப் பெயர் கொண்ட ஒரு நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் வென்றிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய். இதில் வருமானவரி போக அந்த நபருக்கு சுமார் 10 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

லாட்டரி பணம்

இந்தப் பணம் அவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டபோது, அதிலிருந்து ரூ.2.42 கோடியை தன்னுடைய சகோதரிக்கு அவர் அனுப்பினார். அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து, தன்னுடைய முன்னாள் மனைவிக்கு ரூ.84.93 லட்சத்தை, வீடு வாங்குவதற்காகக் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால் இந்த விஷயங்களையெல்லாம் அவர், தன்னுடைய மனைவியிடமிருந்து மறைத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இந்த விஷயம் அவரின் மனைவிக்குத் தெரியவர, மனைவியோ விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்குச் சென்றார். மேலும் அவரின் மனைவி நீதிமன்றத்தில், சகோதரி, முன்னாள் மனைவி என தன்னிடமிருந்து மறைத்த சுமார் ரூ.3.27 கோடியில் மூன்றில் இரண்டு பங்கு தனக்கு அவர் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

நீதிமன்றம் உத்தரவு

அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``லாட்டரியில் வென்ற பணத்தில் Zhou தன்னுடைய சகோதரி, முன்னாள் மனைவிக்கு கொடுத்த பணம் என்பது தம்பதிக்கு பொதுவான சொத்து. எனவே மறைத்த பணத்தில் 60 சதவிகிதத்தை Zhou தன்னுடைய மனைவிக்குத் தர வேண்டும்" என உத்தரவிட்டது.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, இணையதளவாசிகள் பலரும் இதற்கு கமென்ட் செய்துவருகின்றனர். அதிலும் ஒருவர், `நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இது அமைந்துவிட்டது' என கமென்ட் செய்திருக்கிறார்.


மேலும் படிக்க லாட்டரியில் வென்ற பணத்தில் முன்னாள் மனைவிக்கு வீடு; மனைவியிடம் மறைத்த கணவருக்கு அதிரடி உத்தரவு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top