அதானி தொடர் பங்கு வெளியீடு: அதிக முதலீடு செய்ய முன்வந்த அபுதாபி நிறுவனம்... பின்னணி என்ன?

0

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு  வெளியீடு (FPO) ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் அந்தப் பங்கிற்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு அந்த எஃப்.பி.ஓ பணத்தை திருப்பி அளித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய முன்வந்த அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட ஐஹெச்சி  (International Holding Company)  அபுதாபி நிறுவனம் தாம் முதலீடு செய்ய விண்ணப்பித்த தொகை மீண்டும் தமது வங்கிக் கணக்கிற்கு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

அதானி போர்ட்ஸ்

ஐஹெச்சி நிறுவனம் அமரீக (Emirates)  அரசர் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது, அந்த நாட்டிலுள்ள ஐந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். 2019 -ம் ஆண்டு வரை 130 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்துகளை வைத்திருந்த இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 20 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.  தற்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 872 பில்லியன் அமரீக திர்காம் ஆக உள்ளது. இது அமரீக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

 விவசாயம், ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக சென்ற ஆண்டு இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு அதானி குழுமத்தில் முதலீடு செய்தது. அதானி குழுமத்தை சார்ந்த அதானி கிரீன்,  அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களில் அந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் அதானி நிறுவன பங்குகள் பத்து மடங்கிற்கு மேல் லாபம் அளித்துள்ளதால் அந்த நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை தனது முதல் முதலீட்டில் அடைந்துள்ளது.

அதானி குழுமம்

இதன் தொடர்ச்சியாக அதானி என்டர்ப்ரைசஸ் எஃப்.பி.ஓ வெளியீடு மூலம் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்த போது மிக அதிக அளவில் 400 மில்லியன் டாலர் அளவிற்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தது. 20,000 கோடி ரூபாய் வேண்டி திரட்டப்பட்ட மூலதனத்தில் இந்த நிறுவனம் மட்டும் 16% பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியிட்டுக்கு மிக அதிக தொகையை முதலீடு செய்த முன்வந்த நிறுவனமாக ஐஹெச்சி திகழ்கிறது.

 ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை காரணமாக தொடர் பங்கு வெளியீடு தோல்வி அடையும் என்ற பயத்திற்கு மத்தியிலும் ஐஹெச்சி நிறுவனம் தனது முதலீட்டு முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. பெருமுதலீட்டாளர்கள் பிரிவில் மீண்டும் அதிக தொகை முதலீடு செய்ய இருப்பதாக கூறி அனைவரையும் வியக்க வைத்தது. 

கௌதம் அதானி

இது பற்றி முன்பு கருத்து தெரிவித்த அந்த நிறுவனம் தமக்கு அதானி நிறுவனங்களின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், அதானி நிறுவனங்களின் நிதி நிலைமை மிகவும் வலிமையான நிலையில் இருப்பதால் மேலும் முதலீடு செய்ய முன் வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஐஹெச்சி மட்டுமன்றி இந்திய பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி), சுனில் மெட்டல் (Airtel), சஜன் ஜிந்தல் (JSW Energy) போன்ற நமது நாட்டின் பெரும் பணக்காரர்களும் இந்த நிறுவனத்தின்  தொடர் பங்கு வெளியீட்டிருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்றாலும் அந்த நிறுவனத்தின் மறுபங்கு மூலதன ஆய்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவருக்கும் பணம் திரும்ப அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க அதானி தொடர் பங்கு வெளியீடு: அதிக முதலீடு செய்ய முன்வந்த அபுதாபி நிறுவனம்... பின்னணி என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top