`காதலர் தினத்தன்று கடலை மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்!'- மருத்துவர் கு. சிவராமன் சொல்லும் காரணம்

0

கோவை பூ. சா கோ கலை அறிவியல் கல்லூரியில், `மாபெரும் தமிழ்க்கனவு தமிழர் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த நிகழ்வில், தமிழர் உணவு குறித்து மருத்துவர் கு. சிவராமன் பேசியதாவது... ``எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் நிலமும் நீரும் சேர்ந்ததே என்று தமிழ்மரபு உணர்த்துகின்றது. இதை ஒற்றை வரியில் `உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே' என்று புறநானூறு சொல்லுகின்றது. கொரோனாவுக்குப் பிறகு ஆரோக்கியம் குறித்த விஷயங்கள் மாறியுள்ளன.

உலக சுகாதார மையம், ஆரோக்கியம் பற்றி "One Health" என்று வலியுறுத்துகிறது. அதாவது உடல், மனம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, நாம் வாழும் இந்த மண்ணில் ஒவ்வோர் உயிரினமும் சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனித வாழ்வும் ஆரோக்கியமாக அமையும். இதை தமிழ் மரபு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே `பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்' என உரைத்திருக்கிறது.

மருத்துவர் கு. சிவராமன்

ஆண்டாண்டு காலம் தமிழ்ச் சமூகம், நீராகார உணவைத்தான் காலை உணவாக எடுத்துக் கொண்டுள்ளது. நீராகரம் என்பது சிறந்த ப்ரோபையாடிக்ஸ் என்று இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்து இருக்கிறது. மனித உடலில் உள்ள நிறைய நுண்ணுயிருக்கு நீராகாரம் சிறந்தது. இந்திய அளவில் 40 முதல் 50 சதவீதம் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது. இரும்புச்சத்தை சரி செய்வதற்கு எளிய உணவு கம்பு. அரிசியைவிட கம்பில் எட்டு சதவீதம் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கம்மஞ்சோறு, கம்மங்கூழ் ஆகியவற்றை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள், லோ கிளைசெமிக் (Glycemic) உணவு முறையை கடைப்பிடித்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாது. சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டாலோ, உடல் எடை அதிகமாக இருந்தாலோ மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாது. இவற்றைக் குறைக்க நம் உணவில் நேரடியாக சர்க்கரை அளவு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதற்கு பதில் சாமை அரிசி, வரகரிசி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த காலத்தில் இனிப்பு நிறைந்த மிட்டாய்களை பிரபலமாக்குகிறார்கள். காதலர் தினத்திற்காக 100 ரூபாய் பாக்கெட்டில் விளம்பரப்படுத்துகிறார்கள். அதற்கு பதிலாக, காதலர் தினத்தன்று காதலருக்கு கடலை மிட்டாய் வாங்கி கொடுக்கலாம். 'கடலை'யில்தான் காதலும் வளர்கிறது.

பங்கேற்றவர்கள்

சர்க்கரை நோய்க்கு சிறந்த பழம் நாவல் பழம். நாவல் கொட்டையை பொடி செய்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நமக்கான உணவு, எந்த விதத்திலும் இயற்கைக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. தமிழ் மரபு ஒரு சூழலியல் வாழ்வை வைத்திருக்கின்றது. நம் சுவைக்காக இயற்கையை கெடுப்பேன் என்பது தவறான சிந்தனை. தமிழ் மரபு காட்டிய சூழலுக்கு ஏற்ற உணவு முறையை கடைப்பிடிப்போம்" என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.


மேலும் படிக்க `காதலர் தினத்தன்று கடலை மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்!'- மருத்துவர் கு. சிவராமன் சொல்லும் காரணம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top