‘பாதுகாப்பான மாநிலம் எது?‘ - அமித் ஷாவுடன் மோதும் பினராயி விஜயன்; பின்னணி என்ன?

0

இந்தி மொழி உட்பட சில விவகாரங்களில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே முட்டல் மோதல் சம்பவங்கள் ஏற்கெனவே நிகழ்ந்திருக்கின்றன. ‘இந்தி நம் தேசத்தை ஒன்றிணைக்கிறது’ என்று 2019-ம் ஆண்டு அமித் ஷா முன்வைத்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய பினராயி விஜயன், ‘இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. தெற்கு, வடகிழக்கு மக்கள் இந்தி பேசமாட்டார்கள்’ என்றார்.

அமித் ஷா

சமீபத்தில், கர்நாடகாவின் புத்தூர் நகருக்குச் சென்றிருந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், அது பா.ஜ.க-வால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும். கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

மேலும் தொடர்ந்த அமித் ஷா, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 1,700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அந்த அமைப்பையே பிரதமர் நரேந்திர மோடி நிரந்தரமாக தடைசெய்துவிட்டார். தேசவிரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. அவர்களால் ஒருபோதும் கர்நாடகாவுக்கு பாதுகாப்பு கிடைக்காது” என்றார்.

பினராயி விஜயன்

அமித் ஷாவின் பேச்சு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். கோட்டயத்தில் நடைபெற்ற சி.பி.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பினராயி விஜயன், “கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது என்றும் கர்நாடகாவை பா.ஜ.க-வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்றும் அமித் ஷா கூறியிருக்கிறார். இதன் மூலமாக, அவர் என்ன சொல்ல வருகிறார்... அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு?” என்று கேள்விகளை எழுப்பினார்.

மேலும், “கேரளாவில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களும், மத நம்பிக்கை இல்லாத மக்களும் அமைதியாக வாழ முடியும். ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது... மதக் கலவரங்கள் நிகழும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. சிக்மகளூருவில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலாயம் 2021-ம் ஆண்டு சங் பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது.

கர்நாடகாவில் சங் பரிவார் அமைப்பினரால் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. கேரளாவில் ஒற்றுமையாக மக்கள் வாழ்கிறார்கள். எனவே, கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்க வேண்டும்” என்றார் பினராயி விஜயன்.

அமித் ஷா

இதற்கு முன்பு, சபரிமலை விவகாரத்திலும் பினராயி விஜயனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக இருந்தபோது, கேரளா மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது, பா.ஜ.க-வினர் மத்தியில் பேசிய அமித் ஷா, ‘சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதைக் கண்டித்து போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் அரசு காவல்துறையைப் பயன்படுத்துகிறது. போராட்டத்தை ஒடுக்கும் செயலில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபடுமானால், அதற்காக பெரிய விலையைக் கொடுக்க  வேண்டியிருக்கும். பினராயி அரசு தொடர்ந்து அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டால் ஆட்சியை இழக்க நேரிடும்’ என்றார் அமித் ஷா.

பினராயி விஜயன்

அதற்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன், ‘கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, பா.ஜ.க-வின் கருணையால் ஆட்சிக்கு வரவில்லை. கேரள மக்களின் ஆதரவினால் நாங்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாங்கள் செயல்படுகிறோம் என்பதற்காக, ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்பட்ட அரசை மிரட்டுவதற்கு பா.ஜ.க-வின் தலைவர் துணிந்திருக்கிறார். அரசியல் சாசனம் அளித்த அடிப்படை  உரிமைகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக எங்கள் அரசு அச்சுறுத்தப்பட்டிருக்கிறது’ என்றார்.

பினராயி விஜயனுக்கும் அமித் ஷாவுக்குமான கருத்து மோதல் தொடர்கதையாக நீடிக்கிறது.


மேலும் படிக்க ‘பாதுகாப்பான மாநிலம் எது?‘ - அமித் ஷாவுடன் மோதும் பினராயி விஜயன்; பின்னணி என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top