கடன் மோசடி நிறுவனங்களை ஒழித்துக்கட்டுங்கள்!

0

‘கடன் வாங்கித் தருகிறோம்’ என பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்து வந்த ‘ஒண்டர்லோன்’ செயலிக்கு எதிராக விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த ‘ஒண்டர்லோன்’ மோசடி நிறுவனம் பற்றி நம் மனதில் பல கேள்விகள் எழவே செய்கிறது. கடன் வாங்க நினைப்பவர்கள் பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, வங்கிசாரா நிதி நிறுவனங்களை எல்லாம் அணுகாமல், ‘ஆப்’ மூலம் கடன் தரும் நிறுவனங்களை ஏன் அணுகுகிறார்கள்?

ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்க நினைத்தால், அதிகம் அலையத்தான் வேண்டியிருக்கும். இந்த அலைச்சலுக்கு பயந்து, ஆன்லைனில் செயல்படும் ‘ஆப்’ நிறுவனங்களை அணுகினால், எளிதாக கடன் கிடைத்துவிடும் என்று நினைப்பது ஏன்? கடன் வாங்க நினைப்பவர்கள் முன்பின் தெரியாத ‘ஆப்’ நிறுவனங்களை இனிமேலாவது அணுகாமல் இருப்பது அவசியம்!

இந்த ‘ஒண்டர்லோன்’ நிறுவனம் பற்றி கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் இருந்து புகார் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிறுவனம் பற்றி புகார்கள் வரத் தொடங்கிய உடனேயே சைபர் க்ரைம் போலீஸார் இந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை பற்றி விசாரித்து, உண்மையைக் கண்டறிந்து மக்களை எச்சரித்திருக்கலாமே! இந்த நிறுவனம் பற்றி விசாரியுங்கள் என உயர் நீதிமன்றம் சொல்லும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

இந்த ‘ஆப்’ மீது புகார் வரத் தொடங்கிய உடனேயே உரிய விசாரணைக்கு கூகுள் நிறுவனம் உத்தரவிட்டிருக்கலாம். குறைந்தபட்சம், தற்காலிகமாக அந்த ‘ஆப்’பை முடக்கியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல், ‘ஒண்டர்லோன்’ நிறுவனம் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தரத் தயார்’ என்று இப்போது சொல்கிறது கூகுள். ‘ஆப்’ ஸ்டோரில் இருக்கும் ஏதாவது ஒரு ‘ஆப்’ மீது புகார் வந்தால், உடனடியாக உரிய விசாரணை நடத்தி, அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுப்பதை இனியாவது கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடன் கேட்டு வருபவர்களுக்குக் கடன் தராமல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அலையவிடுவதால்தான், இதுமாதிரியான மோசடி நிறுவனங்களில் போய் மக்கள் சிக்குகிறார்கள். தகுதி இருந்தால், ஆதார் எண் அடிப்படையில் எல்லோருக்கும் கடன் தருவோம். ஆனால், வாங்கிய கடனை சரியாகத் திருப்பித் தரவில்லை எனில், இனி ஜென்மத்துக்கும் கடன் கிடைக்காது என்று கறாராகச் சொல்லும் துணிச்சல் வங்கிகளுக்கு ஏன் வரவில்லை?

இது மாதிரியான கடன் மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல் இருக்க, மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். எப்படியோ கடன் வாங்கி நிலைமையை சமாளித்து விடலாம் என்று நினைத்தால், நமக்குதான் பாதிப்பு வந்துசேரும் என்பதைக் கடன் வாங்க நினைக்கும் அனைவரும் அவசியம் புரிந்துகொண்டு, கடன் மோசடி நிறுவனங்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க கடன் மோசடி நிறுவனங்களை ஒழித்துக்கட்டுங்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top