"பாலியல் குற்றச்சாட்டு உறுதி!" - அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம்

0

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளின் ஆய்வின்போது ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட மனநல பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல் நலம் சீராக உள்ளோர் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநல சிகிச்சை தேவைப்படுவோர் அருகிலுள்ள மாவட்டங்களில் அமைந்திருக்கும் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அன்பு ஜோதி ஆசிரமம்

மேலும், சுமார் 54 பேர் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலியல்ரீதியான பாதிப்புக்குள்ளான பெண் மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம உரிமையாளர்களான ஜூபின் பேபி - மரியா தம்பதி உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பெங்களூர் ஆசிரமத்திலிருந்து காணாமல்போனதாகக் கூறப்பட்ட 16 பேர் குறித்து விசாரிப்பதற்காக 16-ம் தேதி விழுப்புரம் தனிப்படை போலீஸ் பெங்களூருக்கு விரைந்திருந்தது. அதன் பின்பு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த ஆசிரமத்தின்மீது புதிய புகார்களும், கண்டனங்களும் வலுத்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் விழுப்புரம் வந்திருந்த தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர், அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர்கள், "இப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து விசாரித்திருக்கிறோம். அதற்கான அறிக்கையை நாங்கள் சமர்ப்பிப்போம். அதுவரை ஏதும் சொல்ல முடியாது. இரண்டு பெண்கள், பாலியல் குற்றச்சாட்டினை நீதிபதியிடம் தெரிவித்திருக்கின்றனர். அதனை எங்களது விசாரணையிலும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்" என்றனர். தொடர்ந்து, குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


மேலும் படிக்க "பாலியல் குற்றச்சாட்டு உறுதி!" - அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top