"பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" - இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

0

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்' என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், ``தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்" என்று கூறியிருந்தார்.

ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் முற்றிலுமாக மறுத்து, பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக, பிபிசி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் நலின் ஹேரத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில்," விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான சுதந்திர நாடு கோரி போராடிக் கொண்டிருந்தனர்.

பழ.நெடுமாறன்

1983-ல் தொடங்கிய ஒரு கடுமையான போராட்டத்தை, சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை, இலங்கையின் ராணுவம் 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்றதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரபாகரன் 19 மே 2009-ம் ஆண்டு கொல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. DNA அதை நிரூபித்திருக்கிறது. இப்போது அவர் உயிருடன் இருப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க "பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" - இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top