``நிர்வாகம் நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேர்; விரைவாகச் செய்தால் நிர்வாகம் நேராகும்!" - ஸ்டாலின்

0

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திவரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் (Iconic Projects) தொடர்பான முதல் ஆய்வு கூட்டம் கடந்த 9-ம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில், எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, சிறப்பு முயற்சிகள், பொதுப்பணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், நீர்வளம் மற்றும் மருத்துவம்–மக்கள் நல்வாழ்வு ஆகிய 14 துறைகளைச் சார்ந்த நடைமுறையிலுள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவை தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திடும் திட்டங்களாகும். இவற்றில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும், தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். இரண்டு, முக்கியத் துறைகளின் செயலாளர்கள், அரசின் பெருந்திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஒரு திட்டத்தின் செயலாக்கத்துக்கு, மற்றொரு துறை தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கி, தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து, முன்னேறிச் செல்ல பாதை வகுக்க வேண்டும். அதற்கு உங்களின் முழு ஒருங்கிணைந்த பங்களிப்பு தேவை. அதற்காகவும்தான் இந்த ஆய்வுக்கூட்டம்" என்றார்.

ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், ``அரசு நிர்வாகம் என்பது, நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேர். அதை விரைவாகச் செய்தால், நிர்வாகம் நேராகும். எனவே தேர் நிலையிலேயே இருப்பதற்காக செய்யப்பட்டதல்ல. திட்டங்கள், காகிதத்தில் இருப்பதற்காக வரையப்பட்டதல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே, ‘செயல் ,செயல்' என செயல்வீரர்களாக அனைவரும் இருக்க வேண்டும். குறிப்பாக, பெரிய நன்மை அளிக்கும் திட்டங்களை அரைகுறையாகச் செய்வதால், சிறு நன்மைகூட விளையாமல் போய்விடும். இதற்கு ஒரேயொரு உதாரணம் , உழவர் சந்தைகள். அதனால்தான், திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள். எனவே, அதிகாரிகள் கவனித்துப் பேணிக்காத்தால் அவை வளரும். அதிகாரிகள் கவனிக்கத் தவறினால், அவை மெலியும்.

முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை நான் கவனித்தேன். அந்தத் திட்டங்கள் தொடர்பான துறைச் செயலாளர்களுக்கு என் பாராட்டுகள். அதேவேளை, சில திட்டங்களில் தொய்வும் சுணக்கமும் இருக்கின்றன. எனவே திட்டப்பணிகளில் முன்னேற்றமடைய இன்னும் 2 மாதங்கள் கழித்து, இதேபோன்ற ஆய்வுக்கூட்டத்தை நடத்தவிருப்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு கூடுதல் செயலாளர்கள் பங்கேற்றனர்.


மேலும் படிக்க ``நிர்வாகம் நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேர்; விரைவாகச் செய்தால் நிர்வாகம் நேராகும்!" - ஸ்டாலின்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top