ஈரோடு கிழக்கு: எடப்பாடி `ரூட் கிளியர்’ ; சிதறாமல் இணையுமா வாக்குகள்?! - இடைத்தேர்தல் அப்டேட்

0

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க, நாம் தமிழர், தே.மு.தி.க கட்சிகள் உட்பட 96 வேட்புமனு தாக்கலாகியிருந்தது. அதில் மொத்தம் 80 வேட்புமனுக்கள் தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக பன்னீர் மற்றும் தினகரன் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியாற்றிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். ``இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தான் வெற்றியடையும் என்ற பார்முலா-வை அ.தி.மு.க எதிர்க்கட்சியில் இருந்து பலமுறை முறியடித்து இருக்கிறது. அதன்படி, இந்த இடைத்தேர்தலில் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்கு பெற்றாலே அது எங்களுக்கு வெற்றிதான்.

வேட்புமனு தாக்கல் செய்யும் தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளைவிட, தற்போது அ.தி.மு.க-வின் பலம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. பன்னீர், தினகரன் வாபஸ், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு, தி.மு.க அரசின் மீதான அதிருப்தி வாக்குகள், இரட்டை இலைக்கான மவுசு என அ.தி.மு.க-வுக்கு நாளுக்கு நாள் மைலேஜ் கூடிவருகிறது. ஈரோடு கிழக்கு தவிர, தென் அல்லது வடமாவட்டங்களில் இந்த ஒரு சமயத்தில் இடைத்தேர்தல் வந்திருந்தால் எடப்பாடி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டார். ஈரோடு கிழக்கில் அதிமுக மிக பலமாகவே இருக்கிறது. குறிப்பாக, வேட்பாளர் தென்னரசு இதே தொகுதியில் இருமுறை வெற்றிப் பெற்று இருக்கிறார். அதனால்தான், தனித்து போட்டியிட முடியில் இருந்த பா.ஜ.க பின்வாங்கியது. கடந்த முறை தனித்து போட்டியிட்ட டிடிவி தினகரன் தரப்பு, நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளைதான் பெற்றது.

தற்போது இடைத்தேர்தலில் அதுவும் கிடைக்காது என்பதால்தான் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்ற காரணத்தை வைத்து தேர்தலில் இருந்து பின்வாங்கிட்டது. ஓ.பி.எஸ்ஸும் ஐந்து இலக்கத்தில்கூட வாக்குகள் பெற முடியாது என்பதால், வாபஸ் பெற்றுவிட்டார். இவையெல்லாமே அ.தி.மு.க-வுக்கு கூடுதல் பலமாகிவிட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதன்படி, அ.தி.மு.க-வின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கு கிடைத்துவிடும். குறிப்பாக, ஈரோடு கிழக்கு நகர்ப்புறம் என்பதால் சொத்துவரி உயர்வு, மின்கட்ட உயர்வால் ஆட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதுபோக, தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க-வினர் மட்டுமே களத்தில் இருந்து வேலை பார்க்கிறார்கள்.

காங்கிரஸார் ரொம்பவும் மெத்தனமாக இருக்கிறார்கள். எங்கள் பக்கத்தில். அ.தி.மு.க - பா.ஜ.க-வுக்கு இடையே சுமூகமான உறவு இல்லையென்பது களத்திலும் எதிரொலித்து வருகிறது. அடிப்படை தொண்டர்கள், நிர்வாகிகள் பாஜகவை இணைத்து தேர்தல் பணியாற்ற தயாராக இல்லை. இதன் காரணமாக, பா.ஜ.க வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டாது. இதனால், சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

அதேபோல, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய பட்டியலின மக்களின் தலைவர்களும், புதிய நீதிக் கட்சி ஏசி சண்முகம் போன்ற சமூக பின்னணி கொண்ட தலைவர்களும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸுக்கும் இங்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. இதுவும் எங்களுக்கு கூடுதல் பலமாக அமைந்து இருக்கிறது. " என்கின்றனர் விரிவாக.


மேலும் படிக்க ஈரோடு கிழக்கு: எடப்பாடி `ரூட் கிளியர்’ ; சிதறாமல் இணையுமா வாக்குகள்?! - இடைத்தேர்தல் அப்டேட்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top