​​​​``எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி​ திமுக அல்ல;​ நானும், ஓபிஎஸ்​ஸூம்தான்" - தேனியில் டிடிவி தினகரன்

0

​தேனி பங்களாமேட்டில் ​அ​.​ம​.​மு​.​க சார்பில் நடைபெ​ற்ற​​ ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட​த்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ``தேனியில் ​தான் முதன்முதலாக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டேன்.​ ​1999-ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதே தொகுதியில் மீண்டும் 2004-ம் ஆண்டில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். ஆனால் ஜெயலலிதாவால் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி பெற்றேன்.​ ​என்னோடு இதே பகுதியை சேர்ந்த ஒருவரும் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ​எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்தாரோ அந்த கட்சியில் அவர் சேர்ந்து​விட்டார். தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் திமுக-வுக்கு சென்று வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

டிடிவி தினகரன்

அ.தி.மு.க வை மீட்டெடுக்க ​கஜினி முகமது போல் போர் தொடுத்து வெற்றி பெறும் வரை ஓய மாட்டோம்.​ ​ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கும் வரை உழைப்போம்.​ ​​அ.தி.மு.க  பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஒரு இடைக்கால தீர்ப்பு தான்.​ ​எனக்காக தொப்பி அணிந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு கேட்டவர் எட்டப்பர் என்ற எடப்பாடி பழனிசாமி.​ ​துரோகம் செய்தவர் இன்று ​அ.தி.மு.க​பொதுச்செயலாளர் பதவியில் அமர இருக்கிறார். அவர் ஆசை நிறைவேறாது.

​கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம், கூட்டணி பலம், பண பலம் மற்றும் ஆட்சி அதிகாரம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை.​ ​மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி உண்டாகும். அப்போது தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி நடக்கும்.​ ​ஜெயலலிதா பல்வேறு போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டினார். அவர் வழியில் நாம் போராடி 152​ ​அடியாக உயர்த்துவோம்.​ ​முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்​ ​மதுரையில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என அவ​ர் வாழ்ந்த​ இல்லத்தை ​இடித்துவிட்டு ​ நூலகமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கருணாநிதிக்கு பேனா சிலை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

பொதுக்கூட்டம்

​ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-வுக்கு பயந்து கொண்டு அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி பலியாக்கி வருகிறார்.​ ​​எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி​ திமுக அல்ல​ டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்​-ஸூம் தான்.​ ​​​துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கலாம்.​ ​சரியான நேரத்தில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

கூட்டம்

​இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு​ ​எடப்பாடி பழனிசாமி குதித்து கொண்டிருக்கிறார்.​ ​​இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் இருக்கிறது​ என்பதை​ தொண்டர்களும் உணர்ந்து வருகின்றனர்.‌ ஜனநாயக வழியில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்”​ என்றார்.​​​


மேலும் படிக்க ​​​​``எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி​ திமுக அல்ல;​ நானும், ஓபிஎஸ்​ஸூம்தான்" - தேனியில் டிடிவி தினகரன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top