``திருமங்கலம், அரவக்குறிச்சி போல, இது ஈரோடு ஃபார்முலா" - செல்லூர் ராஜூ கிண்டல்

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாநகர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வித்தியாசமாக உள்ளனர்.

செல்லூர் ராஜூ

ஆளும் கட்சியினர் இதுவரை தொகுதிக்கு வந்தது இல்லை. தற்போது அமைச்சர்கள் அதிக அளவில் வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும் திமுக அமைச்சர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.

ஈரோடு களநிலவரம் சிறப்பாக உள்ளது ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

செல்லூர் ராஜூ

ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள்தான் கூற வேண்டும். எது மாதிரி இல்லாமல் புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு பெறுவதுபோல வாக்காளர்களை கவர்வதற்காக திமுக புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது.

திருமங்கலம் ஃபார்முலா, அரவக்குறிச்சி ஃபார்முலா, தற்போது ஈரோடு கிழக்கு என் புதிய ஃபார்முலாக்களை கொண்டு வருகின்றனர்.

மக்களை கூண்டுக்கள் அடைப்பதுபோல் அடைத்து ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது வசதிக்கேற்ப உணவு, பணம் வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பணமழை பொழிகிறது.

தேர்தல் ஆணையம் 14 இடங்களில் சீல் வைக்கின்றனர். ஒரு மணி நேரத்தில் திமுகவினர் மற்ற இடங்களில் கூடாரங்கள் அமைத்து அங்கு சென்று செயல்படுகின்றனர்.

சீல் வைப்பதை தேர்தல் ஆணையம் கண்துடைப்பாக செய்கிறது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கமல்ஹாசனின் கொள்கை பணத்திற்கானது. விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார்.

படத்தில் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள், அதனால் கால்ஷீட் கொடுத்திருப்பார். கமல்ஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பது இல்லை, அவரை உலக நாயகன், நல்ல நடிகராகவே பார்க்கின்றனர். அவர் பேச்சை கேட்டால் ஓட்டு போடுபவர்களும் போட மாட்டார்கள். அவருக்கு பேசத் தெரியாது, பேசினாலும் மக்களுக்கும் புரியாது.

திமுக நேற்று வந்த கட்சி இல்லை, ஆட்களை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்பது தெரியும். கமல்ஹாசனை எந்த வகையில் ஆஃப் செய்தார்கள் எனத் தெரியவில்லை.

எங்களைப் பொறுத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் இப்போதாவது விழித்துக் கொண்டு ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்களின் சட்டத்திற்கு புறம்பான செயலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


மேலும் படிக்க ``திருமங்கலம், அரவக்குறிச்சி போல, இது ஈரோடு ஃபார்முலா" - செல்லூர் ராஜூ கிண்டல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top