Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

0

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கக்கூடாது என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை

ஆரோக்கியமான நபர், உடல் நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் நிலையில் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் எந்தப் பிரச்னையும் வராது. வயதாக, ஆக நம் தசைகள் எல்லாம் டைட் ஆகத் தொடங்கும். அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் திடீரென தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையெல்லாம் செய்தால் மூட்டுகளிலும் முதுகுத் தண்டிலும் அழுத்தம் அதிகரிக்கும்.

பல வருடங்களாக ஏதேனும் உடற்பயிற்சிகளோ, யோகாவோ செய்து, உடலை நெகிழ்வுத்தன்மையோடு வைத்திருப்பவர்கள் என்றால், தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதைத் தொடரலாம்.

அதுவே பிரச்னை இருப்பவர்கள், அதைத் தாங்கிக்கொண்டு உடலை வருத்தினால், வலியைக் கட்டுப்படுத்தவே முடியாது. உதாரணத்துக்கு சர்க்கரை நோயாளிகளைச் சொல்லலாம். சர்க்கரைநோய் பாதிப்பதற்கு முன் எல்லா உணவுகளையும் சாப்பிட்டிருப்பார்கள்.

அதுவே நீரிழிவு உறுதியான பிறகு உணவுக்கட்டுப்பாடு என்பது அவசியம் பின்பற்றப்பட வேண்டும். அதன் பிறகும் விருப்பப்படிதான் சாப்பிடுவேன் என்றால் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. மூட்டுப் பிரச்னைகளுக்கும் அதே விதி பொருந்தும்.

⁠⁠⁠⁠⁠உணவுக்கட்டுப்பாடு | மாதிரிப்படம்

மூட்டு தொடர்பான பிரச்னைகள் வந்த பிறகு உடலை நெகிழ்வுத்தன்மையோடு வைத்திருக்க சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். சிலர் 50, 60 வயதைக் கடந்த நிலையிலும் தினமும் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வயதைக் காரணம் காட்டி, தரையில் உட்கார்வதைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. அவர்களுக்கு அதில் எந்தச் சிரமமும் இருக்காது.

சிலர், உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் திடீரென யோகா செய்வது, வொர்க் அவுட் என ஆரம்பித்து, உடனே தரையில் உட்கார்ந்து எழுந்திருக்க முயல்வார்கள். அதன் காரணமாக மூட்டு வலி வரும்.

மூட்டுத்தேய்மானம் உள்ளவர்கள், பருமனாகவும் இருக்கும் நிலையில் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதைத் தொடர்ந்தால் மூட்டுத் தேய்மான பாதிப்பு தீவிரமாகும். வலியும் அதிகமாகும். தரையில் உட்கார்வது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மாடிப்படிகளில் ஏறும்போது மூட்டுகளில் உங்கள் உடல் எடையைப் போல 7 மடங்கு அழுத்தம் கூடும்.

மூட்டு வலி

நீங்கள் உங்கள் வயதுக்கேற்ற சரியான எடையில் இருக்கும்வரை மாடிப்படிகளில் ஏறி இறங்குவது பிரச்னையாகாது. 10 கிலோ அதிகம் என்றாலும் அதைப்போல 7 மடங்கு அதிக எடையை, அதாவது 70 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு ஏறுவதற்குச் சமம். அதற்கு உங்கள் மூட்டுகள் ஒத்துழைக்காது என்பதே காரணம். எடையைக் குறைத்த பிறகு படிகளில் ஏறி, இறங்கலாம். அதுவரை தவிர்ப்பதே பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top