Doctor Vikatan: எட்டு வடிவ நடை- எல்லோருக்கும் ஏற்றதா?

0

Doctor Vikatan: எட்டு வடிவ நடைப் பயிற்சி எல்லோருக்குமானதா? அதனால் என்ன பலன் ஏற்படும்? பூங்காக்களில் கூழாங்கற்களைப் போட்டு அவற்றின் மேல் நடப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதா?

சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா

ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா | சென்னை

எட்டு என்ற எண்ணின் வடிவில் நடப்பது என்பது பல ஆண்டுகளாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மூட்டு பாதிப்பு உள்ளவர்கள் அப்படி நடக்கலாம் என்றும் ஒரு கருத்து மக்களிடம் இருக்கிறது.

வயதாக ஆக நம் எலும்புகளின் ஆரோக்கியம் குறைந்து கொண்டே வரும். எலும்புகளின் மேல் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்கத்தான் அவற்றின் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றன ஆய்வுகள். எட்டு வடிவத்தில் நடக்கும்போது ஒரே நேர்க்கோட்டில் நடக்காமல், வளைந்து நடப்பதால், நடக்கும் திசை மாறுகிறது. அதனால் வேறு திசைகளில் இருந்தும் எலும்புகளுக்கு அழுத்தம் வரத் தொடங்கும்.

நேராக நடக்கும் போதும், குதிக்கும் போதும் மேலிருந்து கீழாக எலும்புகளுக்கு அழுத்தம் வரும். எட்டுவடிவத்தில் நடக்கும்போது கூடுதலாக வேறு திசைகளிலிருந்தும் அழுத்தம் வருகிறது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் என்கின்றன ஆய்வுகள். அதனால் இந்த வகை நடை பலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கடுமையான மூட்டுவலி உள்ளவர்கள் பொதுவாகவே நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எட்டு நடையைத் தவிர்ப்பது நல்லது. கூழாங்கற்களின் மேல் நடப்பது என்பது கிட்டத்தட்ட மசாஜ் போன்றது. மசாஜ் என்பது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் ஒரு செயல். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது அது தசைகளுக்கும் சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். அதன் விளைவாக தசைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தசைகள் எலும்புகளோடு இணைந்து, அதனால்தான் எலும்புகள் வேலை செய்கின்றன. எனவே எலும்புகளின் செயல்பாடும் இதனால் மேம்படுகிறது.

Walking

இதெல்லாம் ஒருபுறமிருக்க, புதிதாக நடைப்பயிற்சியை ஆரம்பிக்கப் போகிறவர்கள், அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப பின்னணியில் யாருக்காவது இதய நோய்கள் இருக்கின்றனவா, அதனால் குடும்பத்தில் யாராவது இறந்திருக்கிறார்களா, தலைச்சுற்றல் பாதிப்பு இருக்கிறதா, மூட்டு தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இவற்றில் ஒன்று இருந்தாலும் மருத்துவரை அணுகி, உடற்பயிற்சிக்குத் தகுதியாக இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு தொடங்குவது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: எட்டு வடிவ நடை- எல்லோருக்கும் ஏற்றதா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top