`உத்தவ் அரசை கவிழ்க்க பட்னாவிஸ், ஷிண்டேயை 150 முறை சந்தித்து பேசினேன்' - மகாராஷ்டிரா அமைச்சர்

0

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. அதோடு சிவசேனாவும் இரண்டாக உடைந்தது. சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேயிடமிருந்து விலகி அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயிடம் சென்றுவிட்டனர். இப்போது சிவசேனாவின் சின்னம் மற்றும் பெயரும் ஏக்நாத் ஷிண்டேயிடம் வந்துவிட்டது. உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க கொரோனா காலத்தில் தான் அதிக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போதைய அமைச்சர் தானாஜி சாவந்த் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா சுகாதாராத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த், தாராசிவ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க எவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``உத்தவ் தாக்கரே 2019ம் ஆண்டு எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தேன். எனவே மாதோஸ்ரீக்கு சென்று உத்தவ் தாக்கரேயிடம் என்னால் பின்னோக்கி செல்ல முடியாது என்று கூறினேன்.

2020ம் ஆண்டு மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே சிவசேனாவில் நான் முதல் ஆளாக கட்சி தலைமைக்கு எதிராக மாறினேன். தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின் பேரில் தாராசிவ் ஜில்லா பரிஷத் தேர்தலில் சிவசேனா-பா.ஜ.க. இடையே கூட்டணி அமைக்கப்பட்டது.

தேவேந்திர பட்னாவிஸ்

2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால் மக்கள் தீர்ப்பை நிராகரித்து சரத்பவாருடன் சேர்ந்து கொண்டு உத்தவ் தாக்கரே புதிய அரசை அமைத்தார். எனவே உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க 2020-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை கடுமையாக வேலை செய்தேன். இரண்டு ஆண்டில் மராத்வாடா, விதர்பா, மேற்கு மகாராஷ்டிராவிற்கு சென்று எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களின் மனதை மாற்றினேன். அதோடு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேயை இரண்டு ஆண்டில் 150 முறையாவது சந்தித்து பேசியிருப்பேன். பட்னாவிஸ் உத்தரவை ஏற்றுத்தான் நான் முதல் முறையாக சிவசேனாவிற்கு எதிராக மாறினேன். இதுதான் உண்மை” என்று தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே உத்தவ் தாக்கரேயை பழிவாங்கவே சிவசேனாவை இரண்டாக உடைத்ததாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க `உத்தவ் அரசை கவிழ்க்க பட்னாவிஸ், ஷிண்டேயை 150 முறை சந்தித்து பேசினேன்' - மகாராஷ்டிரா அமைச்சர்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top