28 வயதில் குடும்ப வன்முறை, 75 வயதில் நம்பிக்கை மனுஷி - சீதாலட்சுமி பாட்டியின் கதை!

0

சில மனிதர்களுக்கு காலம் தந்த சாளரமற்ற வாழ்வும், அதனை அவர்கள் கையாண்ட விதமும் நம்முள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு கதைதான்... திருச்சியை சேர்ந்த, 75 வயது சீதாலட்சுமி பாட்டியின் கதையும். மற்றவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை தரக்கூடிய வாழ்வு அவருடையது.

சீதாலட்சுமி

19 வயதில் திருமணம், 21 வயதில் இரண்டு குழந்தைகளின் தாய், 28 வயதில் கணவன் விரட்டிவிட்ட சோகம்... வாழ்க்கையே முடிந்ததாகப் பலர் கருதும் புள்ளி இது. ஆனால், தன் குழந்தைகளுக்காக வீட்டு வேலை செய்யத் தொடங்கிய சீதாலட்சுமியின் கைகள் இன்றுவரை நிற்காமல் பம்பரமாக சுழல்கின்றன. படிப்பு வாசனையே இல்லாமல், முற்றிலும் கணவனைச் சார்ந்தே வாழ்ந்த பெண், திடீரென தன் வாழ்க்கையின் ஓட்டத்தை வேறு திசைக்கு திருப்பிய தெம்பு... வியப்புக்குரியது.

திருச்சி, பொம்மினி சமுத்திரத்தில் பிறந்த சீதாலட்சுமிக்கு 19 வயதில், அவர் உறவினருடன் திருமணம் நடந்தது. கணவர், வருமான வரித்துறையில் பணிபுரிந்தார். ஆனால் சீதாலட்சுமி தன் எட்டு வயது ஆண் குழந்தை, ஐந்து வயதுப் பெண் குழந்தையோடு வீட்டை விட்டு விரட்டப்பட்டபோது அவருக்கு வயது 25. ``அவரை விட்டு வந்து ஐம்பது வருஷம் ஆயிடுச்சும்மா. என் ஜீவன் இருக்கிற வரையிலும் அவரை பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்" என்கிறார் உறுதியுடன்.

வீட்டு வேலைகளில் மூழ்கியுள்ள சீதாலட்சுமி பாட்டி

வீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் குழந்தைகளுடன் திசையறியாமல் தவித்தபோது, ஒரு பள்ளியில் ஆயாவாக வேலை பார்க்கத் தொடங்கி குடும்பத்தை தாங்கினார். அயராது வீடுகளில் வேலை செய்யத் தொடங்கினார். பிள்ளைகளை தன்னால் முடிந்தவரை படிக்க வைத்தார்.

தற்போது சீதாலட்சுமியின் மகன் திருச்சியிலும் மகள் டெல்லியிலும் வசிக்கின்றனர். நான்கு பேரன், பேத்திகள் உள்ளனர். ``அதான் இப்போ பசங்க வேலை பார்க்குறாங்களே... இன்னும் ஏன் நீங்க வேலை பார்த்து கஷ்டப்படுறீங்க?" என்று கேட்டோம். ‘’நான் வேலைபார்க்கிற வீடுகள்லயும் இதைத்தான் கேட்கிறாங்க. என்னால முடியுற வரைக்கும், என் உடம்புல வலு இருக்குற வரைக்கும் நான் உழைப்பேம்மா. நாளைக்கு என் பிள்ளைங்களே என்னை ஒரு வார்த்தை கேட்டுடக் கூடாதில்ல...’’ என்கிறார் வைராக்கியத்துடன்.

முன்னர் அதிகபட்சமாக 15 வீடுகளில் வேலை பார்த்த இவர், தற்போது 7 வீடுகளில் வேலை செய்கிறார். ``காலையில ஏழு மணிக்கு வேலைக்கு வர்றேன்னு சொன்னா, டான்னு வந்திடுவாங்க" என்கிறார்கள் அவர் வேலைபார்க்கும் வீட்டினர். தான் வசிக்கும் பகுதியில் இருந்து தினமும் 5 கி.மீ நடந்து வேலைபார்க்கும் வாசன் நகர் பகுதிக்கு வந்து தேனீயாகச் சூழலும் இவர், உழைப்பையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்.

சீதாலட்சுமி பாட்டி

மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாத போதும்கூட, கடமையை முடித்தே ஆகவேண்டும் என சீறிப் பாய்ந்துவிடுகிறார் சீதாலட்சுமி. இன்று 20 வயதிலேயே வாழ்க்கையை வெறுத்ததாக ஸ்டேட்டஸ் வைக்கும் 2கே கிட்ஸ், ’மண்டே புளூஸ்’ என திங்கட்கிழமை ஆபீஸ் செல்ல அழும் 90’ஸ் கிட்ஸுக்கு எல்லாம்... ஒவ்வொரு நாளும் உழைப்பதற்காகவே என்று தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும் சீதாலட்சுயை, அவர் ஏரியாவில் ஒரு நம்பிக்கை நாயகியாக அண்ணாந்து பார்க்கிறார்கள். குடும்பத்தை கரையேற்றியதில் காய்த்துப்போன தன் கைகளைத் தேய்த்தபடி சொல்கிறார் அவர், ’‘இந்த உலகத்துல எந்த ஒரு மனுஷனும், மனுஷியும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையே இல்ல. நம்ம சம்பாத்தியத்துல நம்மளை பார்த்துக்க முடியும். அதுக்கு காசு, பணம், வேலைக்கு சிபாரிசுனு எதுவும் வேணாம்... உழைக்கத் தயாரா இருக்குற ஒடம்பு மட்டும்போதும்!”

வொண்டர் வுமன்!


மேலும் படிக்க 28 வயதில் குடும்ப வன்முறை, 75 வயதில் நம்பிக்கை மனுஷி - சீதாலட்சுமி பாட்டியின் கதை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top