விழுப்புரம்: 'பணம் இரட்டிப்பு' - 7,000 பேரிடம் ரூ.85 கோடிக்கு மோசடி; தொடரும் கைது நடவடிக்கை

0

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். கிரேட் இந்தியா டிரேடிங் அகாடெமி மற்றும் மார்க்கெட்டிங் என்ற பெயரை கொண்ட அந்த நிதி நிறுவனத்தில்... 10 மாத காலத்திற்கு ரூ.50,000 செலுத்தினால் ரூ.90,000 கிடைக்கும் என்றும்; ரூ.1,00,000 செலுத்தினால் ரூ.1,80,000 என்றும்; ரூ.2,00,000 செலுத்தினால் ரூ.3,60,000-மும் கிடைக்கும் எனவும் ஆரம்பித்து ரூ.20,00,000 செலுத்தினால் ரூ.36,00,000 கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்துள்ளனர். 

மோசடி

இதனை நம்பிய பலரும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். இந்நிலையில் தான், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் இந்த நிறுவனத்தின் மீது அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்திருந்தார். மேற்கண்டவாறு அந்த தனியார் வர்த்தக நிதி நிறுவனம், ஆசை வார்த்தை கூறியதை நம்பிய மண்ணுலிங்கம், அவருக்கு தெரிந்த 9 பேருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தில் ரூ.55,00,000 வரை கட்டியிருக்கின்றனர்.

ஆனால், அந்த நிறுவனம் இவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்ற பார்த்துள்ளனர். அப்போது, அந்த நிறுவனத்தின் அலுவலகம் பூட்டியிருந்ததோடு, உரிமையாளர் உட்பட அங்கிருந்தவர்கள் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அதன் பின்னரே விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்... இந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, பிரபாவதி, கௌதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

அப்போது, புகார்தாரரை போலவே சுமார் 7,000 பேரிடம் 85 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த 8 பேரையும் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், முதற்கட்டமாக வீரமணி, செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பிரபாவதி, அன்பு என்ற இருவர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அன்பு, பிரபாவதி, வீரமணி, செந்தில்குமார்

இந்த நிலையில், திண்டிவனம் தனியார் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேரையும் விழுப்புரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி சம்பத்குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த தனியார் நிதி நிறுவனத்தின் மோசடி குறித்தான சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க விழுப்புரம்: 'பணம் இரட்டிப்பு' - 7,000 பேரிடம் ரூ.85 கோடிக்கு மோசடி; தொடரும் கைது நடவடிக்கை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top