தந்தையின் திருமணம் மீறிய உறவு? - போதையில் பிரச்னை செய்த மகன்கள்; அப்பாவி இளைஞர் குத்திக் கொலை!

0

விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம். விழுப்புரம் எம்.ஜி சாலையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். தனது வீட்டுக்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக நேற்று மாலை, தான் வேலை பார்க்கும் அந்த பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு போதையில் வந்த 2 வாலிபர்கள், அங்காடி அருகே தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைப் பார்த்த இப்ராஹிம், அந்த இளைஞர்களிடம் சென்று, `ஏன் இங்கே தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள்' எனக் கேட்டிருக்கிறார்.

ராஜசேகர், வல்லரசு

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், இப்ராஹிமை அங்காடிக்குள் தள்ளி கொடூரமாகத் தாக்கியதோடு, தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரின் வயிற்றில் குத்தினர். இதனால் அதீத ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், அதே இடத்தில் இப்ராஹிம் மயங்கி விழுந்தார். அதேபோல், தீபக் என்பவரையும் தாக்கி முகத்தில் கிழித்திருக்கின்றனர். இருவரைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற இரு இளைஞர்களை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார், இப்ராஹிமை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இப்ராஹிம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தங்கும் விடுதி ஒன்றிற்குச் சென்ற இந்த இளைஞர்கள், அங்கிருந்த மேலாளர் சங்கர் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, சங்கரின் கன்னத்தில் கத்தியால் குத்தி கிழித்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதை வீடியோவாகப் பதிவுசெய்தவர்களையும் மிரட்டிய இருவர், இருசக்கர வாகனத்தில் கிளம்பி, வழிகளில் எண்ணெய்கடை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்னை செய்தபடியே அங்காடி பகுதிக்கு வந்திருக்கின்றனர். 

எண்ணெய் கடை பிரச்னை சிசிடிவி காட்சி

இதையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இருவரும் விழுப்புரம் - பெரியகாலனி ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த ஞானசேகரனின் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இளைஞர்களின் தந்தை ஞானசேகரனுக்கு விழுப்புரம் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருந்ததாம்.

இந்த விவரம் ராஜசேகர், வல்லரசுவுக்குத் தாய் மூலமாக தெரியவந்திருக்கிறது. எனவே, இது பற்றி பழக்கடை நடத்திவரும் தங்கள் தந்தையிடம் கேட்பதற்காகவும், அந்தப் பெண்ணை நேரில் கண்டிப்பதற்காக எம்.ஜி சாலை பகுதிக்கு இருவரும் வந்தனராம். அப்போது, அங்குப் பிரச்னையில் ஈடுபட்ட போதுதான்... இப்ராஹிம், தீபக் ஆகியோர் தலையிட்டு பிரச்னையை சமாதானப்படுத்த முயன்றனராம். இதில் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இளைஞர்கள் இருவரும் இப்ராஹிமை கொடூரமாகத் தாக்கி, கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது.

எஸ்.பி ஸ்ரீநாதா - மாவட்ட ஆட்சியர் பழனி

பட்டப்பகலில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அங்காடியில் இப்ராஹிமை இளைஞர்கள் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும், கத்தியால் குத்துப்பட்ட அப்பாவி நபர் கீழே சரிந்து விழும் காட்சிகளும் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. சீரான இடைவெளியில் விழுப்புரம் நகரத்திற்குள்ளாகவே பல இடங்களில் இந்த இளைஞர்கள் பிரச்னையில் ஈடுபட்டிருக்கும் போதிலும் காவல்துறை இறுதிக்கட்டமாகவே சம்பவ இடத்துக்குச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் உள்ள அனைத்து வணிக கடைகளும், ஹோட்டல்களும் இன்று (30.03.2023) காலை முதல் மாலை 4 மணி வரை முழுமையாக கடை அடைப்பு செய்திட `சேம்பர் ஆஃப் காமர்ஸ்' மூலம் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க தந்தையின் திருமணம் மீறிய உறவு? - போதையில் பிரச்னை செய்த மகன்கள்; அப்பாவி இளைஞர் குத்திக் கொலை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top