ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் - சொல்லும் காரணங்கள் என்னென்ன?!

0

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில், பலர் தங்களது பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதன் காரணமாக, அத்தகைய விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் நோக்கோடு, அவசர தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டம்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசிடம் சில விளக்கங்களை கேட்டு கொண்டார். எனினும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்றும் விளக்கமளித்தார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

இது குறித்து ஆளுநர் தரப்பு ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான தனது நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவித்திருக்கின்றன. அதில், மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களாக, ``ஒரு நபரின் திறமையை கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19(1) g பிரிவின் கீழ் அவரின் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே, அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசும் சட்டமியற்ற முடியாது.

சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையத் தொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது.

ஆளுநர் ரவி

இத்தகைய மசோதா மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால், அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். எனவே, அத்தகைய சட்டத்தை மாநில அரசால் தனித்து நிறைவேற்ற முடியாது. மேலும், இந்த மசோதா உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாக அமையும். எனவே, இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும்.

இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும், மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது" என்று ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஆளுநர் தரப்பு அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் - சொல்லும் காரணங்கள் என்னென்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top