ஈரோடு கிழக்கு: வாக்கு வங்கியை தக்கவைத்து கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி! - எப்படி சாத்தியமானது?

0

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 67,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். மொத்தம் 77 பேர் போட்டியிட்ட நிலையில், இவர்கள் இருவரைத் தவிர மற்ற எவரும் டெபாசிட் பெறவில்லை. பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால்தான் டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவுக்கே 10-வது சுற்றில்தான் டெபாசிட் தொகையைத் தக்கவைக்கும் வாக்குகள் கிடைத்தன. இது வெற்றிகரமான தோல்வி என்று அந்தக் கட்சியினர் கூறினாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா 67,300 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க-வே நேரடியாக களமிறங்கியும் 43,923 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் 2016-ம் சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் இருந்து தென்னரசு வெற்றி பெற்றவர். அதேபோல தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க-வும் 1,432 வாக்குகளை மட்டுமே பெற்று பரிதாப நிலையை அடைந்திருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தே.மு.தி.க, இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுடன் சீமான்

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சி, தனது வாக்கு வங்கி பெரும் சரிவைக் காணாமல் தக்கவைத்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சிக்கு இது கடந்த தேர்தலைக் காட்டிலும் சற்று குறைவுதான் என்றாலும், பிற கட்சிகளை ஒப்பிடும்போது இந்த சரிவு ஒன்றுமே இல்லை என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 64.58 % வாக்குகளையும், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு 25.75% வாக்குகளையும் பெற்றிருக்கும் நிலையில், மற்றவர்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மட்டுமே 6.35% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மற்ற கட்சிகளோ, சுயேச்சைகளோ ஒரு விழுக்காடு வாக்குகளைக்கூட பெறவில்லை. கடந்த தேர்தலில் 11,629 வாக்குகளைப் பெற்று, 7.65% வாக்கு வங்கியை வைத்திருந்தது நாம் தமிழர் கட்சி. அதை இடைத்தேர்தலிலும் பெரும் சரிவு காணாமல் தக்கவைத்திருப்பது, சாதாரண விஷயமல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

பிரியன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சீமான் முன்வைக்கும் சித்தாந்தம் சரியா, தவறா என்பதில் எனக்குப் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சீமானுக்கான ஒரு வாக்கு வங்கி உருவாகியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் தெளிவாகக் காட்டுகிறது. மெதுவாக, நிதானமாக, ஆக்கபூர்வமான வளர்ச்சியை சீமான் அடைந்து வருகிறார். இந்த வளர்ச்சி ஆர்கானிக்காக இருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. தி.மு.க, அ.தி.மு.க என்ற 2 பெரிய கட்சிகளின் பல விதமான அழுத்தங்களுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கியை தக்கவைத்திருப்பது பெரிய விஷயம்தான்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இதைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரையும் மிக அழுத்தமாக இருந்தது. ஆனால் உடனே ஆட்சியமைக்கும் அளவுக்கு திடீரென வளர்ச்சி வந்துவிடாது. படிப்படியாக அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும். சீமானுடன் இருக்கும் இளைஞர்கள் அதுவரை பொறுமையாக இருப்பார்களா... விரக்தி அடைந்து விடுவார்களா என்பதை யூகிக்க முடியாது. கட்டுக்கோப்பாக சீமான் அதை கடத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வளர்ச்சி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” என்றார்.


மேலும் படிக்க ஈரோடு கிழக்கு: வாக்கு வங்கியை தக்கவைத்து கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி! - எப்படி சாத்தியமானது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top