``தர்மயுத்தம் நடத்தியதை தவறு என தற்போது ஓ.பி.எஸ் உணர்ந்துள்ளார்” - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

0

``எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அ.தி.மு.க செல்வாக்கை இழந்து கொண்டே வரும்" என தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சசிகலா கணவர் நடராசன் சமாதியில் அஞ்சலி செலுத்தும் தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார். பின்னர் தஞ்சாவூர் வந்த அவர் சசிகலா கணவர் ம.நடராசனின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விளார் கிராமத்தில் உள்ள அவரின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என தி.மு.க அறிவித்திருந்தது. ஆனால் தற்போதை பட்ஜெட்டில் தி.மு.க அரசு தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது அது என்ன தகுதி என தெரியவில்லை. மக்களிடம் ரூ.1,000 குறித்து கேள்வி எழுந்ததை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது உண்மையில் மனதில் இருந்து வந்ததாக தெரியவில்லை.

தமிழக பட்ஜெட்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவோம் என்றனர். அது தொடர்பான அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறியது குறித்து எந்த அறிவிப்பு இல்லை. அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் தான் அரசாங்கம் நடந்துக்கொண்டு இருக்கிறது. பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுள்ளதாக தெரிகிறது.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், ப்ளஸ் 2 தேர்வு எழுதாத நிலையில், அந்த மாணவர்கள் ஐ.டி.ஐ, பாலிடெக்கனிக் படிக்க சென்று விட்டதாக கூறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதற்கான ஆவணங்களை வெளியிட வேண்டும். 2017-ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தியதை தவறு என தற்போது ஓ.பி.எஸ் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் அதுதான் எனது கருத்தும்.

டி.டி.வி.தினகரன்

மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னம் இருந்தும், ஆளும் கட்சிக்கு நிகராக செலவு செய்தும், மக்கள் மத்தியில் தி.மு.க அரசு மீது அதிருப்தி இருந்தும் ஈரோடு கிழக்கில் கோட்டை விட்டுள்ளார். இரட்டை இலை இருக்கிறது. பங்காளிகள் சம்பாதித்து வீட்டில் வைத்துள்ளதை எடுத்து செலவு செய்தனர் இதை எல்லாம் பார்த்த போது, தி.மு.க., சுமார் 20 ஆயிரம் ஓட்டுகளில் வெற்றி பெறும் என நினைத்தேன்.

ஆனால், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்தது அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் இருந்தும், அ.தி.மு.க பலவீனம் அடைந்துள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது. எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அ.தி.மு.க செல்வாக்கை இழந்து கொண்டே வரும். இரட்டை இலை தீயவர்கள் கையில் உள்ளது. அ.ம.மு.க பாராளுமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கிறது” என்றார்.


மேலும் படிக்க ``தர்மயுத்தம் நடத்தியதை தவறு என தற்போது ஓ.பி.எஸ் உணர்ந்துள்ளார்” - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top