தீவிர இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை!

0

சென்னையில், இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்னை இருந்த 42 வயது நோயாளிக்கு, இதய மின் உடலியங்கியல் இடையீட்டு செயல்முறை சிகிச்சையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவரை காப்பாற்றி இருக்கிறது.

இதயத்தின் கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது, இதயத் துடிப்பின்மை எனவும் அறியப்படுகிறது. இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியூட்களில் தோன்றும் இது, அதிவேகமாகக் கடத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு படபடப்பு, தலைச்சுற்றல், வலிப்பு போன்ற தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன. சில நேரங்களில் மாரடைப்புகூட ஏற்படக்கூடும்.

காவேரி மருத்துவமனை

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 42 வயதான நோயாளி ஒருவர், உயிருக்கு மிகவும் ஆபத்தான தீவிர இதயத்துடிப்பு பிரச்னையுடன் சென்னை காவேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா - VT) பிரச்னை இருப்பது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஈசிஜி பரிசோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு, இதய மின் உடலியங்கியல் (Cardiac Blectrophysiology) இடையீட்டு செயல்முறையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. மரபியல் ரீதியாக ஏற்பட்டிருந்த இப்பிரச்னையை சரி செய்வதற்காக மிகச்சிறிய ஊடுருவல் முறையில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, சுமார் ஆறு மணி நேரம் வரை நீடித்தது.

heart

நோயாளிக்கு இதய மின் உடலியங்கியல் மருந்துவர்கள் மின் உடலியங்கியல் (EP) ஆய்வுகளை மேற்கொண்டனர். நோயாளியின் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்குக் கொண்டு வர, ரேடியோ ஃபிரீக்வன்சி அப்லேஷன் ரேடியோ அதிர்வெண் அகற்றல் (RFA) என அழைக்கப்படும் ஓர் இதய இடையீட்டு மருத்துவச் செயல்முறையை மேற்கொண்டனர். எதிர்காலத்தில் துடிப்பின்மை மீண்டும் வராமல் தடுக்க, இன்ட்ரா கார்டியாக் ஃபைப்ரிலேட்டர் (CD) என்ற சாதனமும் அவருக்குப் பொருத்தப்பட்டது.

இது குறித்து, காவேரி மருத்துவமனையின் கார்டியாக் எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் மருத்துவர் தீப் சந்த் ராஜா கூறியதாவது: நோயாளிக்கு, இதயத்தின் வலது கீழறையில் மரபியல் ரீதியிலான இதயத்தசை நோய் (ARVD) என்ற பாதிப்பு இருந்தது. இத்தகைய பாதிப்பு நிலையில் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயத்தின் மின் கடத்தல் அமைப்பில் குறுக்கிணைவுகள் உருவாகும்.

காவேரி மருத்துவமனையின் கார்டியாக் எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் மருத்துவர் தீப் சந்த் ராஜா

சிக்கலான ஒரு மருத்துவச் செயல்முறையை இவருக்கு மேற்கொண்டோம். ஹைபிரிட் அறுவை சிகிச்சை அறையில் மேற்கொள்ளப்பட்ட இச்செயல்முறையில் மிகக்குறைந்த ஊடுருவல் அணுகுமுறையைக் கொண்டு இதயத்தின் உட்புற மற்றும் வெளிப்புறப் பரப்புகள் இரண்டிலும் இருந்து சார்ட் சர்கியூட்கள் எனப்படும் குறுக்கிணைவுகளை அகற்றினோம். வெற்றிகரமான இந்தச் சிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச சாதனம் அகற்றப்பட்டது" என்றார்.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறும்போது, ``மரபியல் ரீதியான இதய வலுவிழப்பு என்பது பிறப்பிலிருந்தே தொடங்குகின்ற ஒரு பாதிப்பு நிலையாகும். நடுத்தர வயதினர் மத்தியில் திடீரென இதயச் செயலிழப்பு / மாரடைப்பு போன்று நிகழ்வுகள் நடைபெறுவதற்கான முதன்மையான காரணங்களுள் இதுவும் ஒன்று.

காவேரி மருத்துவமனை

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் துடிப்போடும், விவேகத்தோடும் எங்கள் மருத்துவக் குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர்" என்றார்.

சிகிச்சைக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பிய அந்த நோயாளி, தற்போது வழக்கம் போல் தனது பணியைத் தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க தீவிர இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top