கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

0

புரோஜெஸ்டோஜென் (Progestogen) ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 30% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் 'ஆக்ஸ்ஃபோர்டு பாப்புலேஷன் ஹெல்த்'ஸ் கேன்சர் எபிடெமியாலஜி' பிரிவின் ஆராய்ச்சியாளர்களால் 'PLOS மெடிசின்' எனும் மருத்துவ இதழில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `புரோஜெஸ்டோஜென் - ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்த எப்படி காரணமாகிறது, கருத்தடைக்கு வேறு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம்.

மருத்துவர் அபிநயா

மகப்பேறு ஆலோசகர் (Consultant Reproductive Medicine) மருத்துவர் அபிநயாவிடம் பேசியபோது, ``கருத்தடை மாத்திரைகள் என்றால், ஹார்மோன் மாத்திரைகள்தான். புரோஜஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும்போது, இது இனப்பெருக்கத்தைத் தடுக்கும் மற்றும் கர்ப்பப்பையில் கருவைத் தங்கவிடாது. நம் உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட இந்த ஹார்மோன் மாத்திரைகள் சற்று வித்தியாசமானவை. இதற்கு நம் உடலில் உள்ள சில திசுக்கள் சாதாரணமாக வினையாற்றினாலும், சில திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்.

ஹார்மோன் மாத்திரைகள் கர்ப்பப்பை, இனப்பெருக்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் வினையாற்றும். மேலும் இனப்பெருக்க உறுப்பு மற்றும் கர்ப்பப்பையை இந்த ஹார்மோன் மாத்திரைகள் பாதுகாக்கும். அதோடு கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

அதே நேரம் மார்பக திசுக்களை பொறுத்தவரை அவை இந்த ஹார்மோன் மாத்திரைகளுக்கு எதிர்வினையாற்றும். மேலும் இந்த ஹார்மோன் மாத்திரைகளின் அளவு வேறுபடும் பட்சத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு இது வழிவகுக்கிறது. 20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை பயன்படுத்தலாம். அவையே மருத்துவர்களாலும் பரிந்துரை செய்யப்படுகிறது.

மார்பக புற்றுநோய்

20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை ஓராண்டு வரை கருத்தடைக்கு பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கருத்தடைக்கு, ஹார்மோன் மாத்திரைகளை தவிர, காப்பர் டி, மாதந்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஹார்மோன் ஊசி போன்றவற்றை பயன்படுத்தலாம்" என்றார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ், ``பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வருடம் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் நம் நாடு தான் முதலிடத்தில் இருந்தது. போதிய விழிப்புணர்வு, சிகிச்சை முறை காரணமாக அதன் தாக்கம் இப்போது குறைந்துள்ளது. ஆனால் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 28 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ்

வெளிப்புற காரணிகள், மாசு, உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை புற்றுநோய் காரணிகள் என்றாலும், பெரும்பாலும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது இது உருவாகிறது. மார்பகப் புற்றுநோய்க்கும் இது பொருந்தும். உடல் பருமன், இயற்கையாக உடலில் உருவாகும் ஹார்மோன் குறைபாடு மற்றும் அதற்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹார்மோன் மாத்திரைகளும் மார்பக புற்றுநோய் உருவாகக் காரணிகளாக உள்ளன.

மிகவும் சிறு வயதில் பூப்படைவதும், 55 வயது வரைக்கும் மாதவிடாய் தொடர்வதும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே உடலில் சுரக்கும் புரோஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதிக நாள்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவது ஆகியன, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

cancer

புற்றுநோய் கட்டிகளில் ஆரம்ப காலத்தில் வலி இருக்காது. மார்புப் பகுதியில் இத்தகைய கட்டிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. முதலில் ஸ்கேன் மூலம் அந்த கட்டி பற்றி அறிந்து கொண்டு, புற்றுநோய் கட்டிக்கான சாத்தியக்கூறுகள் உண்டென்றால் ஊசி மூலம் FNAC சிகிச்சை செய்யப்படும். அதன் முடிவில் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.

மார்பகப் புற்றுநோய் மிகவும் மெதுவாகப் பரவும் தன்மை உடையது. ஒரு புற்றுநோய் செல் இரண்டாக 100 நாள்கள் எடுக்கிறது. இதன் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்திலும், 6 மாதங்கள் இடைவெளியின்றி சிகிச்சை மேற்கொள்வதன் மூலவும் 100 சதவிகிதம் நோயிலிருந்து மீளலாம்.

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை முறை (கீமோதெரபி), ரேடியோதெராப்பி எனும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை முறை மட்டுமே போதுமானது. இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்.

Breast cancer awareness

புற்றுநோய் மட்டும் இன்றி, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களுக்குக் காரணம் நம் உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் மற்றும் அதிகக் கொழுப்பு தான். நாம் உட்கொள்ளும் அரிசி உணவானது உடனடியாகச் செரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை உடையது. பெரும்பாலும் அரிசி உணவின் பயன்பாட்டை குறைத்து, சிறுதானிய உணவுகளை உட்கொள்வது நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கும்" என்றார்.


மேலும் படிக்க கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top