``இது உங்களுக்கு எதிர்ப்பான ஆட்சி என எண்ண வேண்டாம்” - இந்து சமய மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு

0

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய மாசி கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு தொடங்கியது. இந்து சமய மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிக மாநாடாக நடத்தும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைஅதைத் தொடர்ந்து இந்து இயக்கங்கள் போராட்டங்களை நடத்தின. தொடர்ச்சியாக இந்து அமைப்புகளுடன் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிறு மாற்றங்களுடன் ஹைந்தவ சேவாசங்கம் மாநாட்டை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்கம் புதிதாக அச்சடித்த அழைப்பிதழில் சிறப்புரை பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. அமைச்சர் சேகர் பாபு இந்து சமய மாநாடு தொடக்க விழாவுக்கு வந்திருந்தார். உடன் தி.மு.க முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் வந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய ஹைந்தவ சேவா சங்க துணைத் தலைவர் ஸ்ரீபத்மநாபன், "இந்து சமய மாநாட்டுக்கு அமைச்சர்கள் பெயரை போடுவது வழக்கம். ஆனால், யாரும் வருவது கிடையாது. மண்டைக்காடு பகவதி அம்மனின் அருளால் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் இந்த மாநாட்டுக்கு வந்திருப்பது பெருமையாக இருக்கிறது" என்றார்.

மண்டைக்காடு இந்து சமய மாநாட்டில்

ஹைந்தவ சேவா சங்கம் நடத்திய இந்து சமய மாநாடில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதில் பெருமைகொள்கிறேன். பிறப்பால் மனிதர் அனைவரும் ஒன்றே. அவரவர் விரும்புகின்ற மதங்களை அவரவர் சுதந்திரமாக வழிபடுவதற்கு எந்த நாட்டிலே அனுமதி இருக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான சுதந்திரம் அடைந்ததாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரவர்கள் விரும்புகின்ற மத வழிபாடுகளில், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, எந்தவித இடையூறும் இல்லாமல், அவர்கள் மத வழிபாடுகளில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக தமிழ்நாடு இருக்கிறது.

`யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வார்த்தைக்கு இணங்க, இன்றைய தமிழக முதல் அமைச்சர் அனைவரையும் ஒன்றாக நேசிப்பதால்தான் இதுபோன்ற மாநாடுகள் முழு சுதந்திரத்தோடு, எந்தவிதமான தடையும் இல்லாமல், பாகுபாடு இல்லாமல், வேற்றுமை இல்லாமல் அமைதியாக நடக்கிறது. அதற்கு இந்த ஆட்சி ஒருகாரணம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற முதல் அமைச்சர் என என்னை கூறினார்கள். நீங்கள் எப்போது அழைத்தாலும் நாங்கள் வருவதற்கும், உங்களோடு இருப்பதற்கும் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.

மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம்

உங்களை நாங்கள் வேறுபடுத்தி பார்ப்பதே கிடையாது. எங்களில் நீங்களும் ஒருவர். என்ன ஒரு சிறிய பிரச்னை, உங்கள் கோரிக்கைகளை எங்களிடம் நேரடியாக தெரிவியுங்கள். எங்கள் முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் உண்டான ஆட்சி. உங்கள் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதுதன் எங்கள் முதல் வேலை என்பதை இந்த தருவாயில் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எண்ணுவதெல்லாம் இந்த ஆட்சியில் நடைபெறும். உங்களுக்கு எதிர்ப்பான ஆட்சி இந்த ஆட்சி என எண்ண வேண்டாம். உங்களோடு நாங்கள் இருப்போம். எங்களுடன் நீங்கள் இருங்கள். இந்த நிகழ்வு சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனும் இந்த ஆட்சியும் துணையிருக்கும்" என்றார்.

இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில், "நான் சின்னவயதில் கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது நடக்கமுடியாமல் அவதிபட்டேன். ஒருவர் சொன்னதால், ஒரு மண்டலம் கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்தபிறகு என் உடல் சரியானது. வாழ்கையில் ஒரு திருப்புமுனை கன்னியாகுமரியில் ஏற்பட்டது. சமயம் என்பது சமைத்தல் என்பதில் இருந்து வந்தது. சமைத்தல் என்பது பக்குவப்படுத்துதல் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சமய உணர்வு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை. நமக்கு பாரத தாய், தமிழ்த்தாய், பெற்றதாய், பூமிதாய், பசுத்தாய் என ஐந்து தாய்கள் இருக்கிறார்கள். நம் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் இல்லை. ஆனால் அவர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு நிறைய கோயில்கள் இருக்க நம் மன்னர்கள்தான் காரணம்" என்றார்.


மேலும் படிக்க ``இது உங்களுக்கு எதிர்ப்பான ஆட்சி என எண்ண வேண்டாம்” - இந்து சமய மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top