சீனா: 'ஜாக் மா ரிட்டர்ன்ஸ்' - இனி என்ன?!

0

சீனாவை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஜாக் மா `அலிபாபா' என்ற நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 1999-ம் ஆண்டு அந்நாட்டில் இருக்கும் ஹங்சூ பகுதியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்நாள்களில் உலகில் இருக்கும் முக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

தனது சந்தையை விரிவு படுத்திய நாடுகளில் எல்லாம் வெற்றி கண்டது. மேலும் அவர் பொதுவெளியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் முறையாக மூன்று மாதங்களுக்கு பொது வெளியில் காணப்படவில்லை.

அப்போது சீன அரசு தான் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு அப்போது ஜாக் மா, "சீனாவில் இருக்கும் ஒழுங்குமுறை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். வேகமாக வளர பல சீர்திருத்தங்கள் சீனாவுக்குத் தேவை. சீன வங்கிகள் அடகுக்கடை மனநிலையுடன் செயல்படுகிறது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சீனா

இதையடுத்து ஜாக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. எனவே தான் அவர் வெளியில் வராததற்கு அந்த நாட்டு அரசு தான் காரணம் என்று பேசப்பட்டது. பிறகு 2021-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொளி வாயிலாக கலந்து கொண்டார். ஆனால் அப்போதும் அவர் எங்கிருந்து கலந்து கொண்டார் என்று தெரியவில்லை.

பிறகு மீண்டும் மாயமானார். நீண்டகாலமாக அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. பிறகு ஸ்பெயின், நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவர் வசித்து வருவதாக தகவல் வெளியானது.

ஜப்பான்

கடந்த நவம்பரில் செய்தி வெளியிட்ட சில சர்வதேச ஊடகங்கள், "ஜப்பானில் இருக்கும் டோக்கியோ பகுதியில் ஜாக் மா கடந்த 6 மாதங்களாக வசித்து வருகிறார்" என தெரிவித்தன. இந்நிலையில் தான் மீண்டும் சீனாவுக்கு திரும்பியிருக்கிறார் ஜாக் மா. அந்நாட்டில் ஹாங்சோவில் இருக்கும் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

இந்த பள்ளியானது ஜாக் மா மற்றும் பிற அலிபாபா நிறுவனர்களால் கடந்த 2017-ல் நிறுவப்பட்டது. அங்கு அவர், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாட்போட் ChatGPT போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதித்திருக்கிறார். மேலும் ஒரு நாள் கற்பித்தலுக்குத் திரும்புவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சிங்கிள்ஸ் டே... ஆன்லைன் வர்த்தகத்தில் அசரவைத்த அலிபாபா!

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீன செய்தி வட்டாரங்கள். "ஜாக் மாவின் வருகை அந்த நாட்டில் தனியார் துறைகளில் நிலவும் கவலைகளைத் தணிக்க உதவும். மூன்று வருட கொரோனா தடைகளால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதை மேம்படுத்துவதற்கு தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

இதற்கு ஜாக் மா ஆதரவை வழங்குவார். ஆனால் அவர் சீனாவில் எவ்வளவு காலம் தங்க திட்டமிட்டுள்ளார் என்று தெரியவில்லை." என்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளியான லி கியாங். "ஜாக் மா சீனாவுக்கு திரும்புவது தொழில்முனைவோர் மத்தியில் வணிக நம்பிக்கையை அதிகரிக்க உதவும்" என்றார். இவரது வருகைக்கு பிறகு அலிபாபாவின் பங்குகள் 4%க்கு மேல் உயர்ந்திருக்கிறது.

சீனா

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் தொழில் முனைவோர், "ஜாக் மா வருகையால் வணிகங்களுக்கான சீனாவின் சூழல் மேம்படும். தனியார் துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.

தனியார் துறையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் மாறவில்லை என்பது தான் தயக்கத்துக்கு காரணம். மேலும் ஜாக் மா ஏற்கனவே அரசால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அரசு தான் வென்றது. மேலும் ஜாக் மா அதிகாரத்தை, செல்வத்தை இழந்துவிட்டார். அது அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை" என்றன.


மேலும் படிக்க சீனா: 'ஜாக் மா ரிட்டர்ன்ஸ்' - இனி என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top