“இதுதான் நீதியா? - ஹத்ராஸ் தீர்ப்பு அபத்தமானது!”

0

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகரில் 2020-ம் ஆண்டு, செப்டம்பரில் 19 வயது பட்டியலின இளம்பெண் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர்கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதோடு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் அப்போது வெடித்தன.

`மனசாட்சியை அதிரவைக்கும் சம்பவம்’ எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் 2020-ல் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த நிலையில், வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தீப், ரவி, லவகுஷ், ராமு ஆகிய நான்கு பேரில், சந்தீப் மட்டுமே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மற்ற மூவரையும் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

“பிணம் எரிக்கும் வேலையைத்தான் பார்த்தது காவல்துறை!”

இந்தத் தீர்ப்பு குறித்து, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தியிடம் பேசினோம். “தொடக்கம் முதலே மாநில அரசும், காவல்துறையும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டன. தடயங்களை அழிப்பதற்காக, பிணம் எரிக்கும் வேலையைத்தான் காவல்துறை பார்த்தது. இதன் மூலமாகத் தந்திரமாக மறுகூறாய்வைத் தவிர்த்தனர். இது மட்டுமல்லாமல், தற்போது குற்றவாளி எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் சந்தீப், ‘கொலை செய்யும் உள் நோக்கத்துடன் செயல்படவில்லை’ என்றும், ‘குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை’ என்றும்தான் தீர்ப்பு கூறுகிறது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ‘பாதிக்கப்பட்ட ஒருவர் மரணிக்கும்போது கொடுக்கும் வாக்குமூலத்துக்கு, சாட்சி விசாரணையே தேவை இல்லை’ அந்த வகையில், ‘சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரும்தான் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்ய முயன்றனர்’ என்று இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். இந்த நிலையில், இப்படியோர் அபத்தமான தீர்ப்பு வந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘நீதி கிடைத்தால்தான் அஸ்தியைக் கரைப்போம்’ என்று காத்திருந்த அந்தக் குடும்பத்துக்கு இதுதான் நீதியா?

பாதுகாப்பு என்ற பெயரில், காவல்துறை அந்தக் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருக்கிறது. இந்தச் சமூக விலக்கம் காரணமாக, அந்தப் பெண்ணின் பெற்றோர்கூட வேலைக்குச் செல்ல முடியவில்லை. குடும்பத்திலுள்ள மூன்று பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், இறந்த பிறகு அரசு கொடுத்த நிவாரணத் தொகையை வைத்துத்தான் அந்தக் குடும்பம் இன்றுவரை பிழைத்துவருகிறது. அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை’’ என்றார் ஆதங்கமாக.

வன்கொடுமைக்கு ஆளானது, கொல்லப்பட்டது அந்தப் பெண் மட்டுமல்ல. நீதியும்தான்!-


மேலும் படிக்க “இதுதான் நீதியா? - ஹத்ராஸ் தீர்ப்பு அபத்தமானது!”
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top