Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

0

Doctor Vikatan: பெண்களுக்குப் பொதுவாக ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை சுஷ்மிதா சென்னுக்கு ஹார்ட் அட்டாக் என்ற செய்தி அறிந்ததும் பயமாக இருக்கிறது. ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயநோய்கள் ஆண்களை மட்டுமே பாதிக்கும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்து. இதயநோய்கள் பெண்களையும் பாதிக்கும். இன்னும் சொல்லப் போனால் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இதயநோய்கள் பாதிப்புக்கான வாய்ப்புகள் சம அளவில்தான் இருக்கினறன.

நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பாதிப்புகள் உள்ள ஆண்களைப் போலவே பெண்களும் இவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, அவை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு பெண்களை பாதிக்கும் Spontaneous coronary artery dissection என்கிற பிரச்னை வரலாம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் இந்தப் பிரச்னையாலும் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரலாம்.

அடுத்து ப்ரீ எக்லாம்சியா மற்றும் கர்ப்பகால நீரிழிவு எனும் இரண்டு பிரச்னைகளும் உள்ள பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம். அதே போல கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு வரும். இந்த இரண்டு பாதிப்புகள் உள்ள பெண்களுக்கும் பிரசவத்துக்குப் பிறகும் இந்த பாதிப்புகள் தொடரும் வாய்ப்புகள் உண்டு. அதன் விளைவாக இவர்களுக்கு இதயநோய்கள் பாதிக்கலாம்.

ஸ்ட்ரெஸ்

ஆண்களைவிட பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கிறது. குடும்பம், வேலை என பல காரணங்களால் அதிகரிக்கும் அந்த ஸ்ட்ரெஸ்ஸை அவர்களால் வெளிப்படுத்தக்கூட இயலாமல் இருக்கும். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஹார்ட் அட்டாக் வரும் அபாயமும் அதிகரிக்கும் என்பதால் ஸ்ட்ரெஸ்ஸை அலட்சியப்படுத்தக்கூடாது.

ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த போதுமான அளவு ஓய்வு அவசியம். பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் அதை அளவுக்கதிகமாகச் செய்யாதீர்கள். வாரத்துக்கு 150 நிமிடங்கள் என மிதமான பயிற்சிகளைச் செய்யுங்கள். அது நடைப்பயிற்சியோ, நடனமோ எதுவாகவும் இருக்கலாம்.

மாரடைப்பு

நெஞ்சில் வலி, அது கைகளில் பரவுவது என ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் மட்டுமே பலருக்கும் தெரியும். பெண்களைப் பொறுத்தவரை அதீத களைப்பாக உணர்வது, மூச்சு வாங்குவது, வாந்தி வருஷவது போல உணர்வது, ஏதோ அசௌகர்யத்தை உணர்வது, வியர்வை, நெஞ்செரிச்சல், வேறு ஏதேனும் வித்தியாசமான புதிய அறிகுறி என எதுவானாலும் ஐந்து நிமிடங்களில் சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். வருடம் ஒருமுறை இதயநலனை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top