Doctor Vikatan: எப்போதும் தூக்கம்; படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குதல்; அனீமியாவின் அறிகுறிகளா?

0

Doctor Vikatan: கடந்த சில தினங்களாக பணியிடத்தில் தூக்கம், மாடிப்படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குவது, கவனச்சிதறல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறேன். இவையெல்லாம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. நான் மூன்று வேளையும் நன்றாகத் தான் சாப்பிடுகிறேன். பிறகு எப்படி ரத்தச்சோகை வரும்? இந்த அவதிகளுக்குத் தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் | சென்னை

ஆற்றல் குறைவது, அதீத தூக்கம், சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக முடி உதிர்வது, எதிலும் கவனம் செலுத்த முடியாதது, எளிமையான வேலைகளைச் செய்தாலோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்கினாலோ மூச்சு வாங்குவது, கண்களும் நகங்களும் வெளிறி இருப்பது, கூந்தல் மெலிவது என அனைத்துமே ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

வயது வாரியாக ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்களால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையக்கூடும். எனவே முதல் வேலையாக மருத்துவரை அணுகி, உங்கள் ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து ஆலோசனை பெறுங்கள்.

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அந்த உணவுகளின் தரம் பற்றி குறிப்பிடவில்லை. உங்கள் உணவில் என்னவெல்லாம் இடம்பெறும் என்று குறிப்பிடவில்லை. உதாரணத்துக்கு சாதாரண தோசை சாப்பிடுவதற்கு பதில் அதில் முருங்கைக்கீரை, பசலைக்கீரை என ஏதேனும் ஒரு கீரை சேர்த்துச் சாப்பிடலாம்.

முட்டை, எலுமிச்சைப்பழ ஜூஸ் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்தும், இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள்

முட்டை, பருப்பு, கெட்டியான சாம்பார், பருப்பு சேர்த்த தோசை, சன்னா- காய்கறி கூட்டு, கறுப்பு அரிசி, பருப்புடன் கீரை, நிறைய காய்கறிகள் சேர்த்த சிவப்பு அவல் உப்புமா, முட்டை சேர்த்த கட்டி ரோல், பனீர், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, எலும்பு சூப் போன்றவற்றை உங்கள் மெனுவில் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதும் அவசியம். அதாவது இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதைத் தவிர்க்கும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். டீ, காபி, சோடா, ஏரியேட்டடு பானங்கள், சர்க்கரை சேர்த்த பானங்கள், ஆல்கஹால் போன்றவை அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

6 மாதங்களுக்கொரு முறை பூச்சி நீக்கும் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தோட்ட வேலை, ஜிம் வொர்க்அவுட் போன்றவற்றைச் செய்த உடன் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

உணவு இடைவேளைகளில் பசி எடுத்தால், தால் லட்டு, சீட்ஸ் சேர்த்த மிக்சர், உலர் பழங்கள் மற்றும் நட்ஸ், கடல்பாசி சேர்த்த ஸ்மூத்தி, காய்கறி சாலட், முளைகட்டிய தானிய சாலட், நெல்லிக்காய் ஜூஸ், கீரை சூப், சுண்டல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ரத்தசோகை

நன்றாகச் சாப்பிடுவது என்பது வேறு.... சரியாகச் சாப்பிடுவது என்பது வேறு... எனவே நீங்கள் சரிவிகித உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா, மேற்குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களா என்று பார்த்து அதற்கேற்ப உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு அனீமியாவை குணமாக்கும் சப்ளிமென்ட்டுகளை குறிப்பிட்ட காலத்துக்குப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: எப்போதும் தூக்கம்; படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குதல்; அனீமியாவின் அறிகுறிகளா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top