ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் அபகரிப்பு? - நயினார் நாகேந்திரன் தரப்பு தன்னிலை விளக்கம்!

0

நெல்லை சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க உறுப்பினரான நயினார் நாகேந்திரன் மீது அறப்போர் இயக்கம் நில அபகரிப்பு புகாரை தெரிவித்துள்ளது. அதில், “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ளது. அதில், 1.3 ஏக்கர் நிலத்தை இளையராஜா என்பவரிடம் இருந்து வாங்குவதற்காக நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் சென்னையில் போடப்படாமல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்துள்ளது. அந்த நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது என்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் ஒப்பந்தம் போட்ட இளையராஜா மற்றும் நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த நிலத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என நயினார் நாகேந்திரனின் மகனும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ``அந்த நிலம் நாராயணன் கிராமிணி என்பருக்குச் சொந்தமானது. அவர் குலாப்தாஸ் என்பவரிடம் கடன் பெற்றதற்காக 1931-ல் நீதிமன்றத்தின் மூலம் கிரையப் பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.

பா.ஜ.க மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி

குலாப்தாஸின் பேரனான நாராயணன் ஓரா என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வாரிசு சான்று பெற்றுள்ளார். அதை எல்லாம் சரிபார்த்த பின்னர் இளையராஜா என்பவர் விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த நிலம் தொடர்பாக சிலர் போலியான பத்திரங்களை பதிவு செய்துள்ளனர். அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. விற்பனை உரிமம் வைத்துள்ள இளையராஜாவிடம் இருந்து நாங்கள் அந்த நிலத்தை வாங்குவதற்காக, நிலத்தின் உண்மையான மதிப்பான ரூ.46 கோடியில் இரண்டரை கோடி ரூபாயை அட்வான்ஸாக கொடுத்து பத்திரம் பதிவு செய்துள்ளோம்.

அந்த நிலத்துக்காக பதிவு செய்ததில் எந்தவித விதிமுறை மீறலும் கிடையாது. நாங்கள் நிலத்தை 2022 ஜூன் 1-ம் தேதி பதிவு செய்து விட்டோம். ஆனாலும் அந்த நிலத்துக்கான மதிப்பு, பட்டா உள்ளிட்டவற்றை சரிபார்த்த சென்னை சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறகே ராதாபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து எங்களுடைய ஒப்பந்தப் பத்திரத்தைக் கொடுத்தார்கள்.

செய்தியாளர் சந்திப்பில் நயினார் பாலாஜி

ஆனால், பத்திரப் பதிவு விதி 28-ன் கீழ் வேறு இடத்தில் பத்திரம் பதிவு செய்யக் கூடாது என்பதற்கான நடைமுறை ஜூன் 29-ம் தேதி தான் வந்தது. அதற்கு முன்பாகவே நாங்கள் பத்திரம் பதிவு செய்துள்ளோம். அதனால் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. ஆனால் இந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடும் யாருக்கோ ஆதரவாகவோ அல்லது நிலத்தை வாங்க முயன்ற யாரோ சிலருக்காக அறப்போர் இயக்கத்தினர் எங்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். என் தந்தை நயினார் நாகேந்திரன் மீது மக்களிடம் இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் செயல்படும் அறப்போர் இயக்கம் மீதும் அதன்பின்னணியில் இருப்பவர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடருவோம்” என்றார்.


மேலும் படிக்க ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் அபகரிப்பு? - நயினார் நாகேந்திரன் தரப்பு தன்னிலை விளக்கம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top